தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்து பிரபல்யமானவர் தான் பிரித்திராஜ். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள்.இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களில் நடித்துள்ளார்.
200க்கு மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு தற்பொழுது 55 வயது எட்டி விட்டதால் தற்பொழுது சின்னத்திரை சீரியல்களில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார். அந்த வகையில் சன்டியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நடிகர் பப்லுவிற்கு இரண்டாவது திருமணம் ஆகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பப்லு அவர்கள் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். பின் நிகழ்ச்சியில் பேசிய பப்லு தான் ஆரோக்கியமாக இருக்க காரணம் என்னுடைய மனைவி என்று ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அந்த பெண்ணிற்கு 25 வயது தான் ஆகும். ஏற்கனவே இவருக்கு 25 வயதில் ஒரு மகன் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. பப்புலுக்கு தன் முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்திருந்தார்கள்.இந்த சமயத்தில் தான் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார். பின் சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த செய்தி வெளியானதில் இருந்தே 55 வயதில் 25 வயது பொண்டாட்டியா என்று பலர் விமர்சனம் செய்ய துவங்கி இருக்கின்றனர். இதற்கு காஜல் பசுபதி ‘பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். இதுல உங்களுக்கு என்னய்யா பிரச்சனை. விசம்மிக்க பொறாமை புடிச்ச உலகம்யா’ என்று தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவரின் பதிவு வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!