• May 22 2024

நான் சரியான தந்தையாகவோ.. நல்ல கணவனாகவோ இல்லை! பிரசாந்த் நீல் வேதனை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'கேஜிஎப்-2'. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 

ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

அதன்படி, உக்ரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் தான்  பிரசாந்த் நீல். தொடர்ந்து கேஜிஎஃப் சீரிஸில் இரண்டு பாகங்கள் இயக்கிய அவர், தற்போது சலார் படத்தையும் இயக்கியுள்ளார்.


இந்த நிலையில், சலார் படப்பிடிப்பால் தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், 

சலார் ஷூட்டிங் நடந்த போது என்னுடைய குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் போதிய நேரம் செலவிட முடியவில்லை. குழந்தைகள் அழுதால் மட்டுமே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்குச் செல்வேன். நான் ஒரு சரியான தந்தையாகவோ அல்லது கணவனாகவோ இல்லை என பிரசாந்த் நீல் மனம் திறந்துள்ளார்.  

Advertisement

Advertisement