• May 04 2024

"எனக்கும் சேரி நண்பர்கள் இருக்கிறார்கள்"..மன்னிப்புக் கேட்ட பவி டீச்சர்…வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'ஆஹா கல்யாணம்' என்ற வெப் தொடரில் பவி டீச்சராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரிகிடா. இவர் ஒரு நடிகையாக இருந்தாலும் சினிமாவில் இயக்குநராக வர வேண்டும் என்பது தான் இவரது நீண்ட நாள் கனவு.

இதன் காரணமாக நடிகர் பார்த்திபனோடு இணைந்து 'இரவின் நிழல்' என்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுவதற்கு தீர்மானித்தார். ஆனாலும் அந்தப் படத்தின் இயக்குநர் பார்த்திபன் பிரிகிடாவை அந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைத்தார். அந்தக் கதாபாத்திரத்தில் அவர் நிர்வாணமாக நடித்து இருக்கின்றார். இந்தத் தகவல் தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு இது தொடர்பாக பல சர்ச்சைகளும் எழுந்த வண்ணமே உள்ளன.

இந்த நிலையில் நடிகை பிரிகிடா சமீபத்தில் ஒரு பேட்டியில் "சேரி மக்கள் அப்படிதான் பேசுவாங்க.. சேரிக்கு போனால் கெட்ட வார்த்தை தான் அதிகமா கேட்கும்" என சேரி மக்கள் பற்றி தவறாக கூறி இருந்தார். அவர் கூறிய இந்த வார்த்தை சர்ச்சை ஆன நிலையில் சமூக வலைத்தளங்களின் ஊடாகப் பலரும் இவரை விமர்சனம் செய்து வந்ததோடு இவரின் இப்பேச்சுக்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இதனால் நடிகை பிரிகிடா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றினை இட்டுள்ளார். இதற்கு காரணம் அவர் மீது வழக்கு தொடரப் போவதாக சிலர் மிரட்டி இருக்கின்றமையே எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது தொடர்பாக அந்த வீடியோவில் அவர் கூறுகையில் "அந்த மாதிரி ஒரு கருத்து என் மனதில் இல்லை. எனக்கும் சேரி பகுதியில் இருந்து வந்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். நான் சொல்ல வந்த கருத்து வேற, அதை தவறாக மாற்றி சொல்லிவிட்டேன். அதற்காக மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என நடிகை பிரிகிடா மன உருக்கமாக மன்னிப்புக் கேட்டு இதனை கூறி இருக்கிறார். மேலும் அவர் 'எனக்கு வழக்கு போடுவதாகவும் மிரட்டல் வந்தது' எனவும் அந்த வீடியோவில் கூறியிருக்கின்றார். பவி டீச்சர் கேட்ட இந்த மன்னிப்பு வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement