தென்னிந்திய திரையுலகில் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவரே பிரதீப் ரங்கநாதன். இவருக்கு கோமாளி படம் அதிகளவான வசூலை பெற்றுக்கொடுத்திருந்தது. இதனை அடுத்து லவ் டுடே என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இதன் மூலம் அதிகளவான ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துக் கொண்டார். பிரதீப் இப்பொழுது டிராகன் என்ற படத்தில் நடித்து வந்துள்ளார்.
அந்தப் படத்தின் டிரெய்லரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. அதனைப் பார்த்த பெண் ஒருவர் பிரதீப்பை வாய்க்கு வந்தபடி கதைத்த வீடியோ தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் டிராகன் பட நடிகர் பற்றி ஒரே வார்த்தையில் கூறினால் " அவன் ஒரு தறுதல , பொறம்போக்கு என்றதுடன் என்ஜினியரிங்கில் சேர்ந்து படித்துவிட்டு வாழ்க்கையில் என்ன பண்ணுறது என்று தெரியாமல் திரிகின்றவர்கள் எல்லாருக்கும் முன்னோடியாக இருப்பவர் பிரதீப் அண்ணா " என்றார்.
மேலும் 48 அரியர் வைத்திருக்கின்ற அவனே வாழ்க்கையில் முன்னேறிவிட்டான் நான் முன்னேறமாட்டேனா என்று மட்டும் இந்தப் படத்தைப் பார்க்கின்ற யாரும் ஜோசிக்க வேண்டாம் என்றார். அத்துடன் டிராகன் படம் சமூகத்தை சீரழிக்கின்ற படம். அப்படியான படங்களை வெளியிடுவதை தடை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Listen News!