• May 08 2024

பிக்பாஸ் போனதால திருந்திட்டேனு சொன்னான்; ஆனா அதை சொல்லி பப்ளிசிட்டி பண்ணினான்! கூல் சுரேஷை பங்கம் செய்த சந்தானம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் ஆரம்பத்தில் மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு, அண்மையில் தான் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

பிக் பாஸ் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் கூல் சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் நாயகனாக கொண்டாடப்படுபவர். 

இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை, இருப்பினும் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் தனது நகைச்சுவையான வசனங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக அறியப்படுகிறார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த கூல் சுரேஷ், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தனது நண்பன் சந்தானத்தின் பிறந்த நாளில் புது பைக் எடுத்தார்.

இந்த நிலையில்,  கார்த்திக் யோகிபாபு இயக்கத்தில் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு கூல் சுரேஷும் வந்திருந்தார். 


அவரும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். வழக்கம் போல கூல் சுரேஷ் இந்தப் படத்தையும் தன்னுடைய பாணியில் விளம்பரம் செய்தார்.

இதில் குறுக்கிட்டு பேசிய சந்தானம், கூல் சுரேஷை பார்த்து ‘பிக்பாஸ் போனதுக்கு பிறகு திருந்திட்டேனு சொன்ன. இப்போ கத்துற? இவன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் முதல்ல எனக்குத்தான் போன் பண்ணான். மச்சி சால்வை, மாலை போடனும், வரட்டுமா என்று கேட்டான். 

சரி வா-னு சொல்ல, இங்க வந்து வாங்கிட்டு வந்த சால்வையையும் மாலையையும் என்னிடம் கொடுத்து அவனுக்கு போட சொல்லி அதை போட்டோவும் எடுத்துக்கிட்டு பப்ளிசிட்டி பண்ணிக்கிட்டான்’ என்று சந்தானம்  கூல் சுரேஷை பங்கம் செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement