• May 06 2024

குடும்பத்தார் தொடர்பில் சமூகவலைத்தளத்தில் போட்ட பதிவு-அழித்துவிட்டு சில மணிநேரத்தில் நடிகை எடுத்த விபரீத முடிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களில் தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகைகள் மன அழுத்தம் காரணமாகவும் பல்வேறு காரணங்களாலும் தற்கொலைக்கு முயன்று வருகின்றனர் என்று பார்த்து வருகிறோம்.

மேலும் இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த டிவி சீரியல் நடிகை ராய் டெப்லினா டே என்பவர் தனது வீட்டில் அளவுக்கதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளதாக தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு இருக்கையில் தற்கொலைக்கு முன்னர் அவர் தனது குடும்பத்தினரை குறைகூறி பேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவு செய்ததாகவும் ஆனால் திடீரென மனம் மாறிய அந்த ஸ்டேட்டஸை அவர் டெலிட் செய்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

இருப்பினும் இந்த ஸ்டேட்டஸை பார்த்து அவரது நண்பர் உடனடியாக அவரை காப்பாற்ற அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததாகவும், உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது போன் சுவிட்ச் ஆப் இல் இருந்தது என்று கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வந்த நிலையில் காவல்துறையினர் நடிகை ராய் டெப்லினா டே வீட்டுக்கு சென்றபோது அவர் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் தனது குடும்பத்தினர் மீது புகார் கூறியதால் போலீசார் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement