• May 19 2024

கதறி அழுத ஜி.பி.முத்து-Confession ரூமில் நடந்த பரபரப்பு உரையாடல்..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 6வது சீசன் ஆரம்பமாகி இரண்டாம் வாரம் கடந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் 9ஆம் நாள் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...அதாவது டான்ஸ் டாஸ்கில் விக்ரமன் மற்றும் கதிரவன் ஆகிய இருவரும் ஆட விக்ரமன் அதில் ஜெயித்தார்.அதன் பிறகு ADK தனது மடியில் கதிரவனை படுக்க வைத்து அவர்கள் அப்பி செய்தது பிழம நீ தான் நல்லா ஆடினாய் என பலம்பி கொண்டு இருந்தார்.அதன் பிறகு தனலட்சுமி ஷிவின்கிட்டே புலம்பி கொண்டு இருந்தார்.அதாவது பப்ளிக் இருந்துவெளியே வந்த இவர்கள் இருவரையும் எவிட் பண்ணிடுவாங்களா என கேட்டுட்டு இருக்கும் போது ஷிவன் சமாதானம் செய்கின்றார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளராக தங்களுடைய கதையை சொல்லக்கூடிய நடைபெற்று வருகிறது. முந்தைய சீசன்களை போல் அல்லாமல், போட்டியாளர்கள் தங்களுடைய கதைகளை முழுமையாக செல்லக்கூடிய வாய்ப்பு இந்த முறை இல்லை. இந்தமுறை போட்டியாளர்கள் சொல்லக்கூடிய கதை சுவாரசியமாகவும் இன்ஸ்பிரேஷனாகவும் இல்லை என்று ஒருவர் கருதினால் உடனடியாக வந்து பஸ்ஸரை பிரஸ் பண்ணுவதன் மூலம், தங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கலாம். அப்படி 3 போட்டியாளர்கள் பஸ்ஸரை அழுத்திவிட்டால், கதை சொல்பவர் தங்களுடைய கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதில் நடிகை மைனா நந்தினி பேசும்போது இருவர் மட்டுமே பஸ்ஸர் அழுத்தியதால், அவர் தொடர்ந்து தன் கதையை பேசி முடித்தார்.

இதில் பேசிய மைனா, “அப்பா அம்மா பெயர் ராஜா, ராணி. பெயரில் மட்டும்தான். மற்றபடி குடும்பத்தில் ரொம்ப கஷ்டாம். ஒருவேளை எனக்கு சத்துணவு கிடைக்கும் என்றுதான் பள்ளிக்கே அனுப்பினார்கள். எனினும் மிக கஷ்டப்பட்டு சென்னையில் ஜூனியர் ஆர்டிஸ்டாக முயற்சித்தேன். Untime-ல ரயில்வே ஸ்டேஷன்ல தான் படுத்துருப்பேன்.  சிவா விஷ்ணு கோவில்ல பொங்கல் எப்போது போடுவாங்கனு எனக்கு தெரியும். ரங்கநாதன் தெருவில் 50 ரூபாய்க்கு டிரெஸ் வாங்குவேன்.


எப்படியோ ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆனாலும் 1000 பேரில் ஒருத்தியாக, ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம், போட்டி என எல்லாமும் இருந்தது.  கோரிப்பாளையம் எனும் படத்தில் நடித்தேன்.  சுற்றத்தினர், மீடியாவுல நான் தப்பானவளா வருவேன்னாங்க.. ஆனாலும் அப்பா அம்மா சப்போர்ட் எனக்கு இருந்தது. முழு சுதந்திரம் கொடுத்தாங்க. 

பிறகு வம்சம் என படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் மைனாவாக நடித்தேன்.  பிறகு முதல் கல்யாண வாழ்க்கையில் ஏதோ தவறாக நடந்துச்சு. அனாலும் நம்ம எப்படி வாழணும்னு சுத்தி உள்ளவங்க என்ன பேசுனா என்ன? என் வேலைய நான் கரெக்டா பண்ணனும்னு நெனைச்சேன்.. கரெக்டா வாழணும்னு நெனைச்சேன். என்ன தப்பு சொல்ற வேலையை ஒருத்தர் சரியா செஞ்சுட்டு இருக்கும்போது, நான் சரியா வாழ்ற வேலைய நான் பண்ணனும்னு நெனைச்சேன்.. பிடிச்சத சரியா பண்ணேன்.. நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது.. இன்று பிக்பாஸில் இருக்கேன்.. நன்றி” என்று பேசி இருந்தார்.

அதன் பிறகு ஜி.பி.முத்து கொஞ்சம் சோகமாகவே இருந்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஜிபி முத்து மிகவும் மனம் பாதிக்கப்பட்டதாக கேமரா முன்னாள் பேசுகிறார், அதில், “மனசு மிகவும் அழுத்தமாக இருக்கிறது என்றும் என்னால் சாப்பிட முடியவில்லை, எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அழுது புலம்புகிறார்.


மேலும், என் தம்பி ஆனந்திடம் நான் பேச வேண்டும் என்றும் ஏதாவது வழி பண்ணுங்கள். என் மனசு மிகவும் பாதிக்கிறது என்றும் ஜிபி முத்து குறிப்பிடுகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது போல ஜிபி முத்து பேசியது, பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து உள்ளே இருந்த போட்டியாளர்களும் அவரை மேல மெல்ல தேற்றி கொண்டு வந்தனர்.

இதன் பின்னர், ஜிபி முத்துவை Confession Room-க்கு பிக்பாஸ் அழைத்திருந்தார். அப்போது அவரிடம் பேசிய பிக்பாஸ், "வீட்டில் இருந்து செய்தி கேட்டிட்டு தான் கூப்பிட்டேன். விஷ்ணு நல்லா இருக்கறதா தெரியப்படுத்தி இருக்காங்க. விஷ்ணு உட்பட வீட்ல இருக்குற எல்லாருமே அப்பாவ எப்படியாச்சும் 100 நாள் வீட்டுல வச்சுக்கங்கன்னு சொல்லி இருக்காங்க" என்கிறார்.

இதற்கு பதில் சொல்லும் ஜிபி முத்து, "ஆனா எனக்கு இருக்க முடியல. ஒரு மாதிரி மூச்சு முட்டுது எனக்கு" என்றார். பின்னர் பேசும் பிக்பாஸ், "இத்தனை நாட்கள் நீங்கள் நன்றாக விளையாடி கொண்டிருக்கிறீர்கள். முதல் தலைவர் என்ற பதவியையும் 2 மணி நேரம் கஷ்டப்பட்டு ஜெயிச்சு வாங்கி இருக்கீங்க. இந்த முத்து தான் எனக்கு தெரிஞ்ச முத்து. வெளிய இருக்குறவங்க உங்கள பாத்து பல விஷயங்களை கத்துக்குறாங்க.

இந்த நிகழ்ச்சில காலடி எடுத்து வெச்சு இன்னும் ஒரு படி மேலே போய் உலகம் பூரா இருக்குற தமிழ் மக்களுக்கு ஜிபி முத்துன்னா யாரு அப்டின்னு தெரியபடுத்தி இருக்கீங்க. இது ஒரு புது அனுபவமா யோசிச்சு அதுக்கப்பறம் செயல்படுங்க" என ஜிபி முத்துவுக்கு அறிவுரையும் வழங்கி உள்ளார்.

அதற்கு அப்புறம் கதை சொல்லும் டாஸ்கில் கதிரவன் போய் கதை சொல்வதற்கு பதிலாக மோட்டிவேசனல் ஸ்பீச் பண்ணிட்டு வந்தார்.அதற்கு அப்புறம் கவுஸ் மேட்ஸ் கலாய்த்துக் கொண்டு இருந்தார்கள்.அடுத்ததாக மகேஸ்வரி கதை சொல்லும் போது அஸீம் உடனே பசரை அழுத்திவிட மகேஸ்வரி வெளியில் வந்து விடுகிறார்.

அடுத்ததாக ஷவின் தனது கதையை கூறி இருந்தார்.அவருடைய கதையை கேட்டு எல்லோரும் எல்லோரும் கண்கலங்கி விடுகிறார்கள்.பின் மைனா அவரை ஓடி வந்து கட்டிப்பிடிக்கின்றார்.

அதற்கு அப்புறம் ஜி.பி.முத்து எல்லோர்கிட்டையும் காதில் ரகசியம் பேசிட்டு இருந்தார்.அதாவது நான் கதை சொல்லும் போது பர்ஸரை அழுத்தி விடுங்க.என்னுடைய பையன் உடம்பு முடியாதவன் இதைக் கேட்ட அழுதுடுவான்.நீங்க அழுத்தி விடுங்க எனக் கூறியதும் அவங்கள் அண்ணே உங்களுக்கு வெளியில நியை ஆதரவாளர்கள் உள்ளார்கள்.இருந்தாலும் நீங்க சொல்லுறதிற்காக நான் அதைச் செய்கிறோம் என கூறுகிறார்கள்.அதற்கு பிறகு ஜி.பி.முத்து வெளியில சென்றார்.அதற்கு அப்புறம் அமுதவானன் தனது கதையை முழுவதுமாக சொல்லி முடித்தார்.அவரும் அந்த நேரடி எவிக்சனில் இருந்து தப்பித்து கொண்டார்.

அதற்கு பின் குயின்சியும் ஆயிஷாவும் நடனம் ஆட அதில் குயின்சி வெற்றி பெறுகின்றார்.அதற்கு அப்புறம் அமுதவானன் மற்றும் நிவா இரண்டு பேரும் ஆட அதில் அமுதவானன் வெற்றி பெறுகின்றார்.அதற்கு தனியாக போய் நிவா அழ ஆரம்பித்து விட்டார்.

நிவா தனியாக இருக்கும் போது அசல் நிவாவிடம் அமுதவானன் நல்லா ஆடியதால் தான் அவருக்கு நான் வோட் போட்டேன் நீ ஏதாவது தப்பா நினைக்கிறியா எனக் கேட்டதும் ஏன் நீ சம்மந்தம் இல்லாமல் பேசுறாய் எனக் கேட்கின்றார்.இவ்வாறு பல விசயங்கள் நடந்து இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement