• May 18 2024

சிவகார்த்திகேயனின் மனைவி என்னை விட வாயடி-நடிகை தீபா சொன்ன ரகசியம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியவர் தீபா. சமையலுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

மேலும் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து பங்குபெற்று வருகிறார்.



இதனை தாண்டி பல சீரியல்களிலும் சீரியஸான கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்.அத்தோடு கடைக்குட்டி சங்கம் உட்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவரின் வெகுளித்தனமான பேச்சு எல்லோரையும் கவர்ந்திடும்.இந்நிலையில் இவர் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்கும் போது சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி பற்றி பேசியுள்ளார்.



பணக்காரர் எல்லாம் ரொம்ப மோசவானவர்கள் என்று எல்லாம் நினைத்து இருந்தேன்.அதை எல்லாம் உடைத்துப் போட்டவர் சிவகார்திகேயனின் மனைவி.அதாவது சிவகார்த்திகேயன் எனது தம்பி .ஒரு நாள் அவர்கள் என்னை வீட்டிற்கு சாப்பாட்டிற்கு அழைத்து இருந்தார்கள் நான் போகவில்லை.பின் கோவாவில் பிறந்தநாளுக்கு வந்து இருந்தார்கள்.அப்பொழுதும் என்னை சாப்பாட்டிற்கு அழைத்து இருந்தார்கள் .அப்போது போனேன்.அப்பொழுது சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி என் பக்கத்தில் உட்கார்ந்தார்.பல பேர் இருக்கும் போது உங்களின் பக்கத்தில் தான் இருப்பேன் எனக் கூறினார்.

நீங்கள் சாப்பிடும் அழகை பார்க்க ஆவேண்டும்.நான் கேட்டேன் நீங்கள் அவ்வளவிற்கு பேசமாட்டீர்கள் இப்பொழுது நன்றாக பேசுகிறீர் என்று இதற்கு அவங்க சொன்னாங்க அது மீடியாவிற்கு இப்ப நீங்க பேசுங்க எனக் கூறினார்.அதன் பிறகு தான் தெரிந்துச்சு என்னை விட அவங்க நல்லா பேசுவாங்க என என்று சிரித்துக்கொண்டே கூறினார் தீபா அக்கா.








Advertisement

Advertisement