விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 நாட்களுக்கு முதல் ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சி ஆரம்பித் முதல் நாளே பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டதால் ஹவுஸ்மேட்டும் சூப்பராக விளையாடி வருகின்றனர்.
வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.ஆயிஷாவுடன் பேசிக்கொண்டிருந்த GP முத்து, நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு அப்படியே அதிர்ந்துபோகிறார். மேலும், தனக்கு நாய்கள் என்றால் எப்போதுமே பயம் என தனக்கென உரித்தான பாணியில் சொல்கிறார்.
பின்பு கார்டன் பகுதியில் போட்டியாளர்கள் அமர்ந்திருக்கின்றனர். அப்போது. அங்கே வரும் விக்ரமன், ஒரு விஷயத்தை பற்றி பேச துவங்குகிறார். அப்போது அங்கு அமர்ந்திருந்த GP முத்து, "அய்யோ, அதெல்லாம் வேண்டாம். நாளைக்கு மீன் பொரிக்கிறதா, நண்டு பொரிக்கிறதான்னு டிஸ்கஷன்ல நாங்க இருக்கோம்".. எனக்கூறியபடி உள்ளே செல்கிறார். வேகவேகமாக அவர் நடந்து செல்ல, "எங்க போனாலும் நாங்களும் வருவோம்" என அமுதவாணனும், விக்ரமனும் அவர் பின் செல்கின்றனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் ஜாலியாக வலம்வரும் GP முத்து, தன்னுடைய வெள்ளேந்தியான குணத்தால் சக போட்டியாளர்களிடம் ஈர்க்கப்பட்டுள்ளார் என்றே சொல்லவேண்டும்.அத்தோடு இவருடன் தனலக்ஷ்மி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Ele Ennaku Sapaddu Thamle Mukiyam😂#GPMuthu #GPMuthuArmy #BiggBossTamil6 #BiggBoss #BiggBossTamil pic.twitter.com/8ly8EEdSoc
Listen News!