• May 19 2024

பாக்கியாவின் வீட்டிற்கு அருகில் ராதிகாவுடன் குடியேறிய கோபி- சூடு பிடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பரபரப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி ராதிகாவைத் திருமணம் செய்தாலும் ராதிகா அடிக்கடி சண்டை போடுவதால் நிம்மதி இல்லாமல் இருக்கின்றார். அதே போலராதிகா தற்பொழுது பாக்கியாவுக்கு எதிராக மாறியும் விட்டார்.

கோபியும் ராதிகாவும் திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் கொண்டாட கொடைக்கானல் போயிருந்தனர்.அங்கு பாக்கியலட்சுமி குடும்பத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.அங்கு ஏகப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு அப்புறம் வீடு  இரு குடும்பங்களும் வீடு திரும்பியுள்ளது.


இந்நிலையில், பாக்கியலக்ஷ்மி இருக்கும் வீட்டுக்கு எதிர்புறத்தில் உள்ள வீட்டுக்கு குடியேறுகிறார் கோபி. எதிரே இருக்கும் வக்கீல் வீட்டுக்கு ஒருவர் புதிதாக குடிவர இருப்பதாக பாக்கியலக்ஷ்மியிடம் ஒருவர் சொல்ல கோபி தனது இரண்டாவது மனைவியுடன் அவர் முன்பு காரில் வந்து இறங்குகிறார்.


ராதிகாவை கையை பிடித்து கீழே இறக்கிவிடும் கோபி, ராதிகாவின் மகளிடம்,"நம்ம வீடு இதுதான். இனி இந்த ஏரியால தான் இருக்க போறோம்" எனக் கூறுகிறார். இதனால், வாசலில் நின்றிருந்த பாக்கியலட்சுமி கோபத்துடன் அவர்களை பார்த்தபடி நிற்கிறார்.இதனால் இனி வரும் வாரங்களில் இன்னும் சீரியல் சூடு பிடிக்கும் என்று நம்பப்படுகின்றது.


Advertisement

Advertisement