• Apr 28 2024

பாக்கியாவின் செயலால் கோபமான ஈஸ்வரி- ராதிகாவின் சுயரூபத்தை அறிந்து கொள்ளும் கோபி-மயூ கொடுத்த அதிர்ச்சி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அப்போது பாக்கியா அவருக்கு 40 ஆயிரம் அனுப்பிட்டேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எழில் மட்டும் சூப்பர்மா என்ன சொல்ல ஈஸ்வரி அவன் ஏதோ கோபத்துல கேட்டான் நீயும் ஏதோ கோபத்துல பதில் சொன்ன அதுக்காக பணம் அனுப்புவியா? என கோபப்படுகிறார்.

அவன் ஜாலியா போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா லாபம் எல்லாம் அவனுக்குத்தான் உனக்குத்தான் நஷ்டம் என சொல்ல பாக்யா அவர் கேட்டாரு நான் அனுப்பிட்டேன். எனக்கு சந்தோஷமா இருக்கு என சொல்கிறார். இந்த பக்கம் கோபிக்கு ராதிகா நூடுல்ஸ் செய்து கொடுக்க அதை பிடிக்காமல் சாப்பிட உங்களுக்கு என்ன தான் பிடிக்கும் என ராதிகா கேட்க நீ நூடுல்ஸ் இதைத் தவிர வேறு எதுவும் சமைக்க மாட்டியா என கேட்க எனக்கு முழு நேரமும் கிச்சன்ல இருக்கிறதெல்லாம் பிடிக்காது, சமையல்ல அவ்வளவு இன்ட்ரஸ்ட் கிடையாது. போனதும் சிம்பிளா சமைச்சிட்டு வந்துடுவேன் என கூறுகிறார்.


உங்களுக்கு ஹோட்டல்ல சாப்பிட்டு சாப்பிட்டு வீட்டு சாப்பாட்டோட டேஸ்டே தெரியல என சொல்ல கோபி ஆமாம் சாமி போடுகிறார். அடுத்து எழில் பாக்கியாவிடம் அமிர்தா வீட்டில் நடந்ததை பற்றி பேச அவங்களுக்கு நீ தான் நம்பிக்கை கொடுக்கணும் இப்போது இருக்கும் சூழலில் நான் வந்து பேச முடியாது. தாத்தா பாட்டிகிட்டையும் இதைப்பற்றி பேச முடியாது என கூறுகிறார். ரெண்டு பேரும் கொஞ்ச நாள் காத்து தான் ஆகணும் என கூறுகிறார்.


அடுத்து இந்த பக்கம் கோபி சீக்கிரமாக சென்று பெட்டை பிடித்துக் கொள்ள ராதிகா என்ன சீக்கிரமா வந்துட்டீங்க என கேட்க இல்லன்னா என்ன தரையில தள்ளிடுவீங்க என கோபி கூறுகிறார். பிறகு மயூ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என கேட்க உன் கண்ணு முன்னாடி தானே தாலி கட்டினேன் என கோபி கூறுகிறார். அப்புறம் எதுக்கு நான் உங்களை அங்கிள் என்று கூப்பிடனும் டாடி என்று கூப்பிடவா என கேட்க இருவரும் ஷாக்காகின்றனர். இத்துடன்  பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement