• Oct 03 2024

ஈஸ்வரி ரெஸ்டாரண்டுக்கு வில்லனான கோபி .. செழியனால் தலைகீழாக மாறும் பாக்கியாவின் குடும்பம்

Aathira / 18 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியாவை காலேஜுக்கு கூட்டி போய் வருமாறு ஈஸ்வரி சொன்னதனால் செழியன் கண்டபடி கோபத்தில் திட்டுகின்றார். இதனால் ஈஸ்வரி எதுவும் பேசாமல் ரூமுக்கு செல்கின்றார். அதன் பின்பு ஜெனி செழியனை திட்டி விட்டு ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்லுகின்றார்.

இதை தொடர்ந்து பாக்கியா வீட்டிற்கு வந்ததும் ஜெனி நடந்தவற்றை சொல்ல, பாக்யா ஈஸ்வரியை சென்று பார்க்கின்றார். இதனால் ஈஸ்வரி கவலை தாங்க முடியாமல் பாக்யாவை கட்டிப்பிடித்து அழுகின்றார். மேலும் ராமமூர்த்தி தன்னை விட்டுட்டு போனதை நினைத்து கவலைப்படுகின்றார்.


இதை அடுத்து பாக்கியா  நேரே செழியனிடம் சென்று உனக்கு என்ன பிரச்சனை? என்னவென்று சொன்னால் தானே தெரியும் என்று ஆறுதலாக கேட்க, அவர் வேலையில் பிரச்சனை என்று சொல்லுகிறார். இதனால் நான் இனி இனியாவை கூட்டிப் போய் கூட்டி வருகின்றேன். நீ வேலை விஷயத்தை சரிபண்ண பாரு என சொல்லுகிறார்.

மறுபக்கம் கோபி, பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு அனுப்பி வைத்த செப்பை சந்தித்து அங்கு நடப்பவற்றை சொல்லுகின்றார். மேலும் ஈஸ்வரி ரெஸ்டாரன்டை கவுப்பதற்கு என்ன எல்லாம் செய்ய முடியுமா அதையெல்லாம் செய்யுமாறு அவருக்கு சொல்லுகின்றார் கோபி. தானும் அதைத்தான் செய்வதாகவும் சொல்லி கதைக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement