• Apr 26 2024

மண்டபத்துக்குள் நுழைந்ததும் பாக்கியாவின் குரல் கேட்டு ஷாக்கடைந்த கோபி... பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் மிகவும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

செல்வி மணமக்கள் பெயரை ஆங்கிலத்தில் இருக்க அதை கூட்டி படித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அங்கு வரும் மேனேஜர் இங்கு என்ன பண்ணிட்டு இருக்கீங்க கிச்சன்ல வேலை இல்லையா என அனுப்பி வைக்கிறார்.

இதன் பின்னர் ஈஸ்வரி சோகமாக உட்கார்ந்து இருக்க அப்போது அங்கு வரும் இனியா பசிக்குது சாப்பிட ஏதாவது கொடுங்க என சொல்ல பின்னர் செழியன், எழில், இனியா என மூவரையும் உட்கார வைத்து சாப்பாடு பரிமாற கூட்டு பொரியல் எதுவும் இல்லையா என இனியா கேட்டு எனக்கு சாப்பாடு வேண்டாமென கூற செழியன் எனக்கும் எதுவும் இல்லாம சாப்பிட பிடிக்கவில்லை என சொல்கிறான்.



பிறகு ஈஸ்வரி மூவருக்கும் ஆம்லெட் மற்றும் அப்பளம் போட்டு கொடுக்கிறார்.அத்தோடு செழியன் தாத்தா பற்றி கேட்க எழில் அவர் பிரண்டோட பொண்ணு கல்யாணத்துக்கு போயிருக்கார் என சொல்ல நீ கூட்டிட்டு போக வேண்டியது தானே என செழியன் சொல்ல இருவருக்கும் இடையே சண்டை உருவாக ஈஸ்வரி அதை தடுக்கிறார்.



அடுத்ததாக கோபி ராதிகா எல்லோரும் மண்டபத்திற்கு வந்து சேர குடும்பத்துடன் உள்ளே செல்ல அப்போது பாக்யா அப்பளக்கட்டை காணவில்லை என கடைக்காரருக்கு போன் போட்டு கூற பாக்கியாவின் குரலை கேட்டு கோபி ஷாக்கடைகின்றார்.குரல் எங்கே இருந்து வருகிறது எனத் தேட பிறகு ராதிகாவின் அண்ணன் அது கேட்டரிங் ஆளுங்க என கூற கோபி அமைதியாகி விடுகிறார்.



அடுத்ததாக கோபியின் அப்பா ராதிகா வீட்டிற்கு சென்று பார்க்க அங்கு வீடு பூட்டி இருப்பதை பார்த்து அக்கம் பக்கம் பக்கத்தாரிடம் விசாரிக்க ராதிகாவுக்கு கல்யாணம் போரூரில் ஒரு பெரிய மண்டபத்துல நடத்துறதா கேள்விப்பட்டோம் என கூற இவர் அதிர்ச்சி அடைகிறார்.இதன் பிறகு ராதிகாவும் கோபியும் ரிசப்ஷனுக்கு தயாராக பாக்கியா சமையல் செய்து முடித்துவிட்டு ரிசப்ஷன் தொடங்கி விட்டதா என்று பார்க்க வெளியே வர மயூவை பார்த்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement