• Sep 20 2024

தமிழில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுங்களேன்; பிரபல பாலிவுட் நடிகை

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஆலியா பட். பாலிவுட்டில் ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் தொடர்ந்து '2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்த பாலிவுட்டின் கனவுக் கன்னியான ஆலியா பட், மறைந்த நடிகரான ரிஷி கபூரின் மகனான ரன்பீர் கபூர் என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 14-ஆம் திகதி தமது பெற்றோர்களின் சம்மதத்துடன் மும்பையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தள பக்கங்களின் ஊடாக அறிவித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் மட்டுமன்றி திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அந்த ஜோடிக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் ஹீரோயின் ஆன நடிகை ஆலியா பட் "தமிழில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் கட்டாயமாக நடிப்பேன்" எனத் தெரிவித்து வருகின்றார். அதுமட்டுமல்லாது இவருக்கு 2ஸ்டேட்ஸ் திரைப்படத்தின் மூலம் ஒரு தமிழ் பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தநிலையில் அவர் மேலும் கூறுகையில் "நான் ஏற்கெனவே 2 ஸ்டேட்ஸ் படத்தில் தமிழ் பெண்ணாக நடித்து இருக்கின்றேன், இதனை வைத்து ஒரு சான்ஸ் கொடுக்கலாமே?, ஆர்.ஆர்.ஆர் படத்துக்காக தெலுங்கு கற்றுக் கொள்ளவே ஒன்றரை ஆண்டுகள் ஆனது, தமிழ் கற்றுக்கொள்வது இன்னும் கஷ்டம் என்று கேள்விப்பட்டேன், பிரம்மாஸ்திரம் படம் தமிழில் வெளியானது எனக்கு மிகவும் மகிழ்ச்சி" எனவும் தெரிவித்து இருக்கின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement