• Oct 16 2024

படத்துக்காக உண்மையாகவே பிச்சையெடுத்த கவின்..! எவ்வளவு கலெக்சன் கிடைத்தது தெரியுமா?

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் காணப்படுகின்றார். இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதன் பின்பு தனக்கேற்ற சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

தற்போது பிரபல வெற்றி இயக்குனராக காணப்படும் நெல்சன் சமீபத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் முதல் படமாக கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் சிவ பாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ஜென்மார்டின் இசையில்  உருவாக உள்ளது.

இந்தப் படத்தில் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. அன்றைய நாளில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படமும் வெளியாக உள்ளது.


இந்த நிலையில், இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கவின் அளித்த நேர்காணலில் தான் உண்மையாகவே படத்திற்கு பிச்சை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த படத்துக்காக பிச்சைக்காரன் கெட்டப் போட்டு ஒரு அக்காவிடம் சென்று சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு என சொல்லி பிச்சை கேட்டாராம். அதன் போது அவர் கவினுக்கு 20 ரூபாய் போட்டுள்ளார். அப்போதுதான் தனக்கு நம்பிக்கை வந்தது. அதன் பின்பு சூட்டிங் செல்லலாம் என்று கூறியதாகவும் குறித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Advertisement