• Sep 20 2024

கெளதம் மேனனை கண்டுகொள்ளாத சூரி.. அதே கதையில் நடிக்கும் ஆக்சன் ஹீரோ..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சூரி தற்போது ஹீரோவாகிவிட்ட நிலையில் அவரிடம் ஒரு கதை சொல்ல கௌதம் மேனன் முயற்சித்ததாகவும் ஆனால் அது நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த கதையை பிரபல ஆக்சன் ஹீரோவிடம் கௌதம் மேனன் கூறிய நிலையில் அவர் உடனே ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து விரைவில் கௌதம் மேனன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மம்முட்டி நடிப்பில் வரும் மலையாள படத்தை கெளதம் மேனன் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு அதிரடி ஆக்சன் கதையை எழுதி முடித்துள்ள கௌதம் மேனன் அந்த படத்தில் சூரி நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அவரை தொடர்பு கொண்டதாக தெரிகிறது.

ஆனால் சூரியை சந்திக்கும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கவில்லை என்பதை அடுத்து தமிழ் திரையுலகின் மாஸ் ஆக்சன் ஹீரோ விஷால் இடம் இந்த கதையை அவர் கூறியுள்ளதாகவும் விஷால் இந்த கதையை கேட்டவுடன் கண்டிப்பாக நாம் இணைந்து இந்த படத்தை உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



ஒரு பக்கம் கௌதம் மேனன், மம்முட்டி படத்தை இயக்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் விஷால், ’துப்பறிவாளன் 2’ படத்தை இயக்க இருக்கிறார். இருவரும் தங்களது கமிட்மெண்டை முடிந்த பிறகு இந்த படத்தில் இணைவார்கள் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை விஷால் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் முதல் முதலாக விஷால் நடிக்க உள்ளார் என்பதும் அதுவும் ஒரு அதிரடி ஆக்சன் கதை என்று கூறப்படுவதை அடுத்து இந்த படம் நிச்சயம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement