• May 20 2024

கோபியிடம் வந்து நிலாவின் அப்பா என்று சொன்ன கணேஷ்- பாக்கியாவை திட்டித் தீர்த்த ராதிகா- சந்தேகத்தில் பழனிச்சாமி- Baakiyalakshmi Serial

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோயிலில் பாக்கியா சமைத்த அன்னதானம் சூப்பராக இருக்கு என்று சொல்லி பணத்தைக் கொடுத்து பாராட்டுகின்றனர்.அந்த நேரம் பழனிச்சாமி வர பாக்கியா அவரிடம் சென்று பேசுகின்றார். அப்போது பழனிச்சாமி ஏன் சோகமாக இருக்கிறீங்க என்னாச்சு என்று கேட்க, பாக்கியா செழைியன் விஷயத்தைச் சொல்கின்றார்.


அப்போது பழனி பாக்கியாவை ஆறுதல்ப்படுத்துகின்றார். தொடர்ந்து வீட்டில் கோபி இருக்கும் போது ராதிகா வந்து பேசாமல் இருக்க, கோபி எதுக்காக என்கூட பேசாமல் இருக்கிற என்று கேட்க, ராதிகா போன முறை இந்த வீட்டில இருந்து அவமானப்பட்டு தான் போனேன். இந்த முறை உங்க அம்மா என்னை எப்படி எல்லாம் பேசினாங்க அதுக்காகத் தான் வந்திருக்கிறேன் என்கின்றார்.

தொடர்ந்து அங்கே இனியா நிலா பாப்பாவைக் கொண்டு வர, கோபி நிலாவைத் துாக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கின்றார். அந்த நேரம் பாக்கியா வர, கோபி இனியா அப்பிடியே அப்பா மாதிரி அவ கிட்ட எல்லாத் திறமையும் இருக்கு என்று பாராட்டுகின்றார். பின்னர் வீட்டுக்கு கணேஷ் வர வாசலில் நிற்கும் கோபி கணேஷ் எழிலைப் பார்க்க வந்திருப்பதாக நினைத்து உள்ளே அழைக்கின்றார்.


அப்போது அங்கு வரும் பாக்கியா எழில் இல்லை வெளில போய்ட்டான அவன் வர லேட்டாகும் என்று சொல்லி கணேஷை வெளியே அழைத்து சென்று சமாதானப்படுத்தி அனுப்பி விட்டு, கோபி என்னாச்சு என்று கேட்க பாக்கியா இதை இங்க பேச முடியாது காலைல வாக்கிங் போவீங்க தானே அப்போ சொல்லவா என்று கேட்க அங்கு ராதிகா வர பாக்கியா கிளம்பி விடுகின்றார்.

ராதிகா, கோபியிடம் அவங்க என்ன பேச வந்தாங்க என்று கேட்க கோபி தனக்கு தெரியாது என்கின்றார். தொடர்ந்து பாக்கியா எழிலின் அம்மாவுக்கு போன் பண்ணி பேசுகின்றார். அவர் கணேஷ் அமிர்தாவுடன் சேர்ந்து வாழ்வது தப்பில்லையே என்று சொல்ல, பாக்கியா உங்க கிட்ட நேர்ல வந்து பேசிக்கிறேன் என்று போனை வைக்கின்றார்.


பின்னர் பாக்கியா கிச்சனில் நிற்க ராதிகா சென்று எதுக்காக கோபி கிட்ட பேசினீங்க என்று கேட்க பாக்கியா அது பசங்க விஷயம், உங்க கிட்ட சொல்ல முடியாது என்று சொல்ல ராதிகா பாக்கியாவை வேணும் என்றே திட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement