• May 08 2024

தம்பி தம்பி என சொல்லிவிட்டு இப்படித் தான் பண்ணுவாங்களா?- நிக்சனும், ஐஷுவும் பண்ணியது தப்பு- கடும் கோபத்தில் சனம் ஷெட்டி

stella / 6 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் முதலில் பங்கேற்றனர். அவர்களில் பவா செல்லதுரை தானாகவே வெளியேற அனன்யா, விஜய் வர்மா உள்ளிட்டோ எவிக்ட் செய்யப்பட்டனர். அதன் பிறகு வைல்ட் கார்டு ரவுண்டு மூலம் கானா பாலா, தினேஷ், அன்னபாரதி, அர்ச்சனா, டிஜே பிராவோ ஆகிய ஐந்து பேரும் உள்ளே வந்தனர்.

வைல்ட் கார்ட் மூலம் வந்தவர்களை ஸ்மோல் ஹவுஸ் வீட்டிற்கும் அனுப்பி வைததுள்ளனர். முதல் நாளே இரண்டு வீட்டாருக்கும் பல மோதல்கள் ஏற்பட்டது. இதற்கிடையே பிக்பாஸ் வீட்டில் இன்னொரு விஷயம் நடந்துள்ளது.


அதாவது நிக்சனும், ஐஷுவும் கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்துக்கொண்டனர். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிலும் நிக்சனை தம்பி தம்பி என்று அழைத்து வந்த ஐஷு திடீரென அவரை தம்பி ஸ்தானத்திலிருந்து இறக்கி உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல் நடந்துகொண்டதை பார்த்த ரசிகர்கள் ஆஹா இன்னொரு மருத்துவ முத்தம் விவகாரமோ என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துபிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான சனம் ஷெட்டி கூறுகையில், "நிக்சனை ஐஷு தம்பி தம்பி என சொல்லிவிட்டு அவருக்கு இப்போது முத்தம் கொடுப்பது கேவலமாக இருக்கிறது. அவர்களின் இந்த செயல் உறவு முறைகளையே கேவலப்படுத்துவது போன்று இருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement