• Sep 19 2024

பிக்பாஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் ஐந்து வைல்டு கார்ட் எண்ட்ரி! அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப்படுவார்கள்.ஆனால் பிக்பாஸ் 7-வது சீசன் பல்வேறு புதுமைகளை கொண்டது என்பதால், வைல்டு கார்டு எண்ட்ரியிலும் ஒரு அதிரடி மாற்றம் செய்துள்ளனர்.


அது என்னவென்றால் ஒரே நேரத்தில் 5 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக அனுப்ப உள்ளார்களாம். இதனை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

குறித்த போட்டியாளர்கள் ஐவரும் வருகிற அக்டோபர் 28-ந் திகதி இரவு 8 மணிக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஏற்கனவே கானா பாலா மற்றும் சீரியல் நடிகை அர்ச்சனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல உள்ள நிலையில், எஞ்சியுள்ள 3 போட்டியாளர்கள் யார் என்பது தான் தற்போது புரியாத புதிராக இருக்கிறது.


Advertisement

Advertisement