• Sep 17 2024

கொலு பொம்மைகள் இருந்த பெட்டிகளை அடித்து நொறுக்கிய சில்வண்டுகள்! திகைத்து நிற்கும் சீதா! இன்றைய எபிசோட்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தாெலைக்காட்சியில்  ஔிபரப்பாகி வரும் சீரியல் தான் சீதா ராமன். இத் தொடர் சமூகத்தில் நடக்கும் உண்மையான  விடயங்களைஇ காதல் கதையுடன் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையப்படுத்தி ஔிபரப்பாவதனால் ரசிகர் கூட்டம் அதிகமாகவே இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய  நாளுக்கான எபிசோட் வெளிவந்திருக்கின்றது. அதில் என்ன நடக்க போகின்றது என்பதனை பார்க்கலாம்.

ஹோட்டலில் இருந்து வீட்டிற்கு வரும் மகாவை பார்த்து 'என்ன ஒரு மாதிரி இருக்கா, என்ல உள்ள கோவம் இன்னும் போகலையா' என்டு கேக்கிறா அர்ச்சனா. 'அதெல்லாம் ஒன்றும் இல்லை அக்கா' என்று சொல்லிக் கொண்டே உள்ளே செல்கிறார் மகா.  

மறுபக்கம் மகாலட்சுமியின் காதலனுக்கு மனைவி இருப்பதாகவும்  அவர்கள் இருவரும் சேர்ந்தே மகாவிடம் காசு பறிப்பதற்கு இவ்வாறான திட்டம் போட்டதாகவும் காட்டப்படுகிறது.

இன்னொரு பக்கம்,  சீதாவும், சேதுவின் தங்கை மீராவும்  வீட்டில் கொலு வைக்க சிறு சிறு தெய்வங்களை  எடுத்து வைக்க தயாராகின்றார். அப்பொழுது எரிச்சல் பிடித்த மகா 'சீதாவிடம் வந்து கொலு வைக்க வேண்டாம், பிசினஸ் ஆட்கள் வீட்டுக்கு வருவாங்க, மீறி வச்சா உன்ன கொல்லுவேன்' என சீதாவை மிரட்டிட்டு வெளிய போரா மகா.

இதையடுத்து சீதா இருக்கும் இடத்திற்கு வந்த ராம் ,சேதுவும் இதெல்லாம் பார்த்து சந்தோசப்படுறாங்க. அதன்பின் சேதுவ பாத்து மீரா சொல்றா, 'அண்ணன் உனக்கு இது ஞாபகம் இருக்கா? நாங்க அம்மா கூட இருக்கும்போது அவ்ளோ  சந்தோஷமா இருந்தம். அம்மா கொலு வைக்கும் போது அவ்ளோ அழகா இருக்கும் அது ஒரு அழகான காலம்' என சேதுவிடம் சொல்லி சந்தோசப்படுகிறார் மீரா.

பின், 'கொலு வைக்கிற வேலையெல்லம் யாருட ஏற்பாடு' என்று ராம் கேக்க  'சீதாவின் வேலை தான்' என்று சொல்ற மீரா.


இதற்கு 'சீதா வேற யாரும் இல்ல, எங்க அம்மா தான்' என்று சொல்கிறார் சேது. 'அப்படி என்றால் சீதா எனக்கு பாட்டியா' என்று கிண்டல் செய்கிறார் ராம்.

இதை யாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த சில்வண்டுகள், இதை எப்படியாச்சும் கெடுக்கனும் என்டு திட்டம் போடுகிறார்கள். இதற்காகவே கதவின் ஓரமாக ஒழிந்து இருந்து பார்க்கின்றனர்.

அதன் பின்பு சீதா, மீரா, வாட்ச்மேன், செல்வி ஆகியோர் கொலு பொம்மைகள் இருக்கும் பெட்டிகளை மாடிக்கு தூக்கி கொண்டு போய் வைத்துவிட்டு மீண்டும் கீழே காபி குடிக்க வந்துவிடுகின்றனர்.

இதப்பாத்த சில்வண்டுகள் மூன்று பேரும் மாடிக்கு ரகசியமாக போறாங்க. அங்க 'ஒரு பொம்மை கூட முழுசா இருக்க கூடாது எல்லாத்தையும் அடிச்சு ஒழிக்கணும். இடையில சீதா வந்தா அவையும் போட்டு அடிப்போம்' என்று பிளான் பண்ணி மெயின் சுவிச்ச ஆப் செய்துட்டு எல்லா பெட்டிகளையும் அடிச்சி துவம்சம் செய்கின்றனர்.

அந்த நேரத்தில் திடீரென அங்கு வந்த குடும்பத்தினரிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கின்றனர். இத பாத்து 'ஏய் சில்வண்டுகளா.. என்ன வேலை இது? என்று சீதா கேட்கிறார். 'மகாவா உங்கள இப்படியெல்லாம்  எல்லாம் பண்ண சொன்ன' என்று மகாவின் அண்ணா கேட்கிறார். 

இதையடுத்து, 'நீங்க என்னத்த அடிச்சி ஒடச்சிங்க என்டு பெட்டிய திறந்து பாருங்க' என சீதா சொல்றா. அதன்படி, பெட்டிய திறந்து பார்த்தா பெட்டில ஒரு பொம்மைகளும் இல்லை. இதை பார்த்து எல்லாருமே சிரிக்கிறாங்க. 

'நீங்க மூன்று பேரும் கதவுக்கு பின்னால் ஒழிஞ்சிருந்து பார்த்த அப்பவே நான் சந்தேகப்பட்டேன். அதனால தான் இப்படி செய்தன்' என்டு சீதா சொல்றா. 'எனக்கு வேற கோபத்துக்கு உங்க மூன்று பேரையும் அடிக்கனும் போல தோணுது, ஆனா சீதா வேணாம் என்டு சொல்லிட்டா. இப்ப ஒழுங்கு மரியாதையா போய் மூணு பேரும் பாவாடை தாவணி கட்டி ரெடியாகி வாங்க' என்று சேது சொல்கிறார். 

இதையடுத்து, சீதா பாட்டு பாடி நவராத்திரியே சிறப்பிக்கிறார். அந்த இடத்துக்கு   பிசினஸ்  கிளைன்ஸை  கூட்டிக்கொண்டு வருகிறார் மகாலட்சுமி. அங்கு வந்தவ, அவற்றை நிறுத்துமாறு சொல்ல, சீதா பாடுவதை நிறுத்தி விடுகிறார்.

இதற்கு  பிசினஸ்  கிளைன்ஸை, எங்களுக்கு கலாச்சார இவெண்ட் பிடிக்கும். சீதாவை பட சொல்லுமாறு மகாவிடம் சொல்கின்றனர்.

இந்த நிலையில், 'மகாலட்சுமி சொன்னா தான் பாடுவேன்' என்று சொல்கிறார் சீதா. வேறு வழி இன்றி சீதாவை பாடச் சொல்கிறார் மகா. 

அதன்படி, சீதாப்பாடுவதை பார்த்த பிசினஸ் கிளைன்ஸ் 'எங்களுக்கு  நம்பிக்கை வந்துவிட்டது. டீல் ஓகே' என்டு மகாலட்சுமிக்கு கைகொடுத்துகின்றனர். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement