• Aug 23 2025

புஷ்பா படத்தால் அல்லு அர்ஜுனுக்கு இப்புடி ஒரு விருதா..? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா திரைப்பட விருது விழா, பல பிரபலங்களை ஒரே மேடையில் கொண்டுவந்தது. ஆனால், அந்த விழாவின் சிறப்பாக இருந்தது அல்லு அர்ஜுனுக்கு "புஷ்பா 2" படத்திற்காக வழங்கப்பட்ட சிறந்த நடிகர் விருது தான்.


புஷ்பா 2 திரைப்படத்தில், "புஷ்பா ராஜ்" என்ற வீர கதாபாத்திரத்தில் நடித்தவர் அல்லு அர்ஜுன். படத்தில் அவரின் உடல்பொலிவு, பேச்சுத்தன்மை என்பன ரசிகர்களைக் கவரும் வகையில் இருந்தது. விருதைப் பெற்றபின் மேடையில் பேசும் வாய்ப்பு கிடைத்தபோது, அல்லு அர்ஜுன் மிகவும் எளிமையாகவும், நன்றியுடனும் பேசினார்.


தெலுங்கானாவின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இந்த விருது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். அதில், அல்லு அர்ஜுனுக்கு விருது வழங்கிய தருணம், சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகின்றது. அரசியல் மற்றும் சினிமா ஒரே மேடையில் இணைந்து நின்ற நிகழ்வாக இது குறிப்பிடப்படுகின்றது.


Advertisement

Advertisement