• May 05 2024

"ஜாக்கெட் கூட சரியாக ரெடி செய்யவில்லை"…திடீர் திருமணம் தொடர்பாக நட்சத்திராவின் பதிவு…ஆறுதல் தெரிவித்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிகளவான வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று 'யாரடி நீ மோகினி'. ஏராளமான ரசிகர் கூட்டத்தை கொண்டு விளங்குகின்ற இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனங்களையும் கவர்ந்தவர் தான் நடிகை நட்சத்திரா. இந்த சீரியல் முடிந்த கையோடு பின்னர் மற்றொரு பிரபலமான டீவி சேனலில் ஒளிபரப்பாகும் 'வள்ளி திருமணம்' என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக ரசிகர்களின் குறும்பு நாயகியாக வலம் வந்த நட்சத்திரா பிரபலங்கள் யாருக்குமே சொல்லாமல் விஷ்வா என்பவரை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக நட்சத்திராவின் இன்ஸ்டா பக்கத்தில் அவரின் திருமணம் புகைப்படம் வெளியான பின்பு தான் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது என்ற விஷயமே பலருக்கும் வெளியில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த திடீர் திருமணத்திற்கான காரணம் என்ன? என்பதை அவரின் சமூக வலைத்தளப் பக்கங்களின் மூலமாக நட்சத்திராவிடம் தொடர்ந்து கேட்டு கொண்டே வந்தனர். நட்சத்திராவின் திருமணத்தில் அவரின் நெருங்கிய தோழிகள், சின்னத்திரை பிரபலங்கள் என முன்னர் கூறியது போன்று யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் பலரும் குழப்பத்திற்கு ஆளாகியிருந்தனர். இதுப்பற்றியும் ரசிகர்கள் பலரும் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் திருமணம் தொடர்பான குழப்பங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ ஒன்றின் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறியுள்ளார் சீரியல் நடிகை நட்சத்திரா. அந்த வீடியோவின் வாயிலாக அவர் கூறும் போது “யாராவது நண்பர்கள் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவார்களா? என் கல்யாணத்தை பார்த்தாலே தெரியும் ஜாக்கெட் கூட சரியாக ரெடி செய்யவில்லை ரொம்ப சிம்பிளாக, பிளைனில் தான் போட்டு இருந்தேன்" என மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து அவர் கூறுகையில் "தயவு செய்து இதை வைத்தே புரிந்து கொள்ளுங்கள் அவ்வளவு அவசரமாக, ஒரே ஒரு நாளில் முடிவு செய்யப்பட்டு ஒரே நாளில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு திடீரென இந்த திருமணம் நடைபெற்றது. அதற்கு காரணம் உண்மையிலும் எனது தாத்தா தான். திடீரென்று அவருக்கு ரொம்ப உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. அவருக்காகவே இந்த திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்தது. அதனால் தான் யாரையும் என்னால் கூப்பிட முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நட்சத்திராவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் "நண்பர்கள் இல்லமால் திருமணம் நடந்தால் யாருக்கு தான் கவலை இருக்காது, இருந்தாலும் கவலைப் படாதீர்கள்" என ஆறுதல் கூறி வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement