• Apr 28 2024

உங்களை யாருடனும் ஒப்பிடாதீர்கள்... திடீரென தத்துவக் கருத்துக்களை வெளியிட்ட ராதிகா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவர் ராதிகா சரத்குமார். அதுமட்டுமல்லாது தற்போது சீரியல் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகின்றார். அத்தோடு விஜயகாந்த், பிரபு, சரத்குமார், நெப்போலியன் எனப் பல பிரபலங்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார். 


அதுமட்டுமல்லாது இவர் ஒரு சிறந்த அரசியல் வாதியும் கூட. அதாவது 2006 இல் இடம்பெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் தனது கணவர் சரத்குமாருடன் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் அதே ஆண்டில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து 2007 முதல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துணைப் பொதுச்செயலாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


ராதிகாவைப் பொறுத்தவரையில் இவர் தனது திருமண வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்தவர். அதாவது இவரின் முதல் திருமணம் ஆனது கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வர இரண்டாவதாக ரிச்சர்ட் ஹென்றி எனும் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிறந்த பெண் குழந்தை தான் ரேயான் ஹென்றி. 

சில காலங்களுக்கு பிறகு பிரச்சனை காரணமாக அவரிடமும் விவாகரத்து பெற்ற பின்னர் சில காலங்கள் தனிமையில் இருந்து பிறகு நடிகர் சரத்குமாரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.


ராதிகா - சரத்குமார் தம்பதியருக்கு ராகுல் எனும் ஒரு மகன் உள்ளார்.  மேலும் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். தற்போது அவர் பல படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகின்ற ராதிகா தற்போது பகிர்ந்த ஒரு பதிவானது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது திடீரென தனது இன்ஸ்டா பக்கத்தில் தத்துவக் கருத்து ஒன்றினைப் பதிவிட்டிருக்கின்றார்.

அதாவது "உங்களை யாருடனும் ஒப்பிடாதீர்கள், உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை மட்டும் பாருங்கள், உங்களிடம் என்ன இருக்கின்றதோ அதனை அனுபவித்து வாழுங்கள்" எனவும் குறிப்பிட்டு இருக்கின்றார். மேலும் "நீங்கள் அழகானவர், தைரியம் மற்றும் உத்வேகம் உள்ள ஒரு வகையானவர்" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.


இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் "யாருக்காக இதை சொல்லுறீங்க" எனக் கேள்வி கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது இவரின் இந்தப் பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement