• Apr 30 2024

யாருமே எதிர்பார்க்காத வண்ணம்... பிறந்தநாளில் முதல் ஆசீர்வாதத்தை பெற்ற சினேகா... அதுவும் யாரிடமிருந்து தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பிலும் சரி, அழகிலும் சரி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. ரசிகர்களால் புன்னகை அரசி என சிறப்பாக அழைக்கப்பட்டு வந்த இவர் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கின்றார். அதிலும் குறிப்பாக விஜய், முரளி, பிரசாந்த், பிரபு,  எனப் பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார்.


இவ்வாறாக பல படங்களிலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்த சினேகா திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் இணைந்து குழந்தை பெற்ற பின்னரும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.


அதிலும் குறிப்பாக சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்படும் காதல் தம்பதி என்றால் அது நம்ம சினேகா - பிரசன்னா ஜோடி தான்.


அதாவது கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படத்தில் இணைந்து நடித்தபோது நடிகர் பிரசன்னாவுக்கும் நடிகை சினேகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இக்காதலானது கல்யாணத்திலும் சென்று சேர்ந்தது. அதாவது இருவீட்டார் சம்மதத்துடன் திரையுலகினர் புடைசூழ இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர்.


குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சினேகா, தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு அழகாக மாறி உள்ளார்.

இந்நிலையில் சினேகா இன்றையதினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகின்றார். அதற்கு முதன்முதலாக இயற்கை தாயிடமிருந்து தன்னுடைய ஆசீர்வாதத்தை வாங்கியிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது இயற்கை அன்னையின் ஆசீர்வாதத்துடன் தன்னுடைய பிறந்தநாள் தொடங்குவதாகவும் கூறி ஒரு சில புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கின்றார். 


சினேகாவின் இந்தப்பதிவிற்கு பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இயற்கை அம்சங்களை பலரும் சிதைத்து வருகின்ற இந்தக்காலத்தில் அந்த இயற்கையிடமிருந்து ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என சினேகா நிலைத்திருப்பது பாராட்டத்தக்க ஒரு விடயம் தான்.

இவரின் இந்த பதிவிற்கு கீழே பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருவதோடு அவருக்கு திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் தமது வாழ்த்து மழையினையும் பொழிந்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement