பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடக்க உள்ளது. இதில் போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
இதில் இலங்கையை சேர்ந்த ஜனனி குணசீலன் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். செய்தி வாசிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக இருந்த இவர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ள ஜனனி பிக்பாஸ் முதல் சீசனில் இருந்தே பங்கேற்க வேண்டும் என விருப்பம் கொண்டவராக இருந்துள்ளார். ஆனால் வயது காரணமாக பங்கேற்காமல் இருந்த அவர் 21 வயதில் சீசன் 6ல் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என நம்பிக்கையோடு இருந்துள்ளார். அந்த நம்பிக்கை வீண் போகாமல் தற்போது பங்கேற்றும் உள்ளார்.
பிக்பாஸ் 3 ஆவது சீசனில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா போல இம்முறை இவரும் களமிறங்கியுள்ள ஜனனிக்கு ஏற்கனவே ஆர்மி உருவாகி விட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது பிக்பாஸ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளர்களில் ஒருவராகவும் ஜனனி மாறி உள்ளார். இவர் பணிவு, விவேகம் கொண்ட ஒரு திறமையாளராக விளங்கி வருகின்றார்.
இந்நிலையில் லொஸ்லியாவிற்கு நிகராக ஜனனியை ஒப்பிடாதீர்கள் என லொஸ்லியா ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் "லொஸ்லியா ஜனனி போல் இல்லை என்றும், அவர் யாரையும் ஒருபோதும் வீழ்த்த மாட்டார் என்றும், அவர் தவறு செய்ய மாட்டார் என்றும், அப்படித்தான் செய்தது தவறாக உணர்ந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பார்" எனவும் கூறி வருகின்றனர்.
பலரின் மனங்கவர்ந்த போட்டியாளராக ஜனனி இருக்கின்ற நிலையில் லொஸ்லியா ரசிகர்கள் இப்படிக் கூறி வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. பொறுத்திருந்து பார்ப்போம் லொஸ்லியாவா ஜனனியா பெஸ்ட் என்று.
Listen News!