• May 19 2024

அடேங்கப்பா... நடிகர் பிரசாந்த் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். அவரது காலக் கட்டத்தைச் சேர்ந்த விஜய், அஜித் போன்றவர்கள் முதல் படத்திலிருந்து வெற்றி கொடுப்பதற்காகப் பத்து படங்கள் காத்துக் கொண்டிருந்த வேளையில் பிரசாந்தின் முதல் படமே ஹிட் அடித்தது.


இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகர் ஆனார். மேலும் இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தனது திருமணத்தின் பின், சில தனிப்பட்ட காரணங்களுக்காக சினிமாவை விட்டு சற்று விலகியிருந்தார். 

பின்னர் 2011ல் கருணாநிதி எழுதிய ‘பொன்னர் சங்கர்’ என்ற படம் மூலம் ரீ-என் டரி கொடுத்தார். இவ்வாறாக 90ஸ் பெண்களின் கனவு நாயகனாகவும், காதல் அரசனாகவும் ஜொலித்த பிரசாந்த்தினுடைய சொத்து விபரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதாவது தி.நகரில் பிரமாண்ட இடம் ஒன்றில் பிரசாந்த் கோல்டு டவர் என்கிற 17 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டடம் உள்ளதாகவும், அதில் தான் உலகின் மிகப்பெரிய ஷோரூம்மான ஜோய் ஆலுக்காஸ் இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு எட்டு மாடிகளில் மொத்தம் ஒரு லட்சம் சதுர அடியில் திறக்கப்பட்ட ஷோரூம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. 


அதுமட்டுமல்லாது ஏனைய மாடிகளிலும் பல கடைகள் வாடகைக்கு விடப்பட்டு அதன் மூலமாகவும் பிரசாந்த் பணம் சம்பாதித்து வருகின்றார். மேலும் வேறு பல தொழில்களில் இன்வெர்ஸ் செய்து அதன் மூலமாகவும் லட்ச கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றார்.

அத்தோடு பிரசாந்திற்கு  5க்கும் அதிகமான சொகுசு கார்கள், மற்றும் சென்னையில் பல வீடுகள் உள்ளதாகவும், மொத்தத்தில் பிரசாந்த்திடம் 85 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement