• Apr 28 2024

கோடம்பாக்கம் ஏரியா மற்றும் பல்லேலக்கா ஆகிய பாடல்களுக்கு நயன்தாரா டான்ஸ் ஆடக் காரணம் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை நயன்தாரா, கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவருடன் பாலிவுட் நடிகர் அனுபம்கேர், நடிகர் சத்யராஜ், வினய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தினைப் ப்ரமோஷனுக்காக ஓர் நேர்காணலில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார்.அந்த வகையில் அவர் அந்த நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய விடயங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது


அதாவது இந்த கிறிஸ்மஸ் வரும் போது தான் சினிமாவில் கால் பதித்து 20 வருடங்களைப் பூர்த்தி செய்து விட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய இவர் நான் இப்போது சந்தோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் சினிமாவிற்கு வந்த புதிதில் என்னுடைய பெயர் எங்கையாவது இருக்கோணும் என்று ஆசைப்பட்டேன் அது நடந்திருக்கு என்று தான் கூறவேண்டும் என்றார்.


மேலும் பேசிய அவர் சிவகாசி மற்றும் சிவாஜி ஆகிய படங்களில் தனியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது குறித்தும் கூறினார். அதாவது நான் இப்படி பாட்டுக்கு டான்ஸ் டேம் போகின்றேன் என்று கூறும் பேதே பலர் என்னை விமர்சித்தாங்க. ஆனால் எங்க கிட்ட ஏதோ இருக்கிறதால தானே நாம ஏதோ கரெக்டா பண்ணுவோம் என்று தானே கூப்பிடுறாங்க என்று யோசிச்சு தான் டான்ஸ் ஆடப் போனேன். அதே மாதிரி நான் ஆடிய கோடம்பாக்கம் ஏரியா மற்றும் பல்லேலக்கா பாடல் ரெண்டுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்றும் என்னும் பல சுவாரஸியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement