• Apr 24 2024

காதலை ஏற்க மறுத்த வாரிசு நடிகரின் தந்தை... திடீரென தற்கொலை செய்ய போன நடிகை - நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் கார்த்திக்.

இவர் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பதும் அதனைத் தொடர்ந்து நேரம் வந்துடுச்சு, ஆகயா கங்கை, நன்றி, மௌன ராகம், மேட்டுக்குடி உள்ளிட்ட படங்களில் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்

 இவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.சில வருடங்கள் பிரேக்கில் இருந்த கார்த்திக் அனேகன், தானா சேர்ந்த கூட்டம், Mr. சந்திரமௌலி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.இப்போது அவரது மூத்த மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நுழைந்து படங்கள் நடிக்கிறார்.

அந்த காலகட்டத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு play boy என்று சினிமா வட்டாரங்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் நடிகர் கார்த்திக் பற்றி பல தகவல்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.


அதில், "பல நடிகைகள் நடிகர் கார்த்திக் காதலில் விழுந்தார்கள். ஆனால் அவர் எந்த நடிகையிடமும் தவறாக நடந்துகொள்ளவில்லை.


நடிகையான ஸ்ரீ பிரியா கார்த்திக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புடுத்தினாராம். ஆனால் கார்த்திக் திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் நடிகை ஸ்ரீ பிரியா தற்கொலை முயற்சி செய்துள்ளார். அத்தோடு அன்றைய காலத்தில் இதை பற்றி பல பத்திரிக்கைகளில் வந்துள்ளது.அதம் பிறகு ஸ்ரீ பிரியா ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் " என வீடியோவில் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement