• May 12 2024

குக்வித் கோமாளி சீசன் 3 இன் டாப் பைனலிட்ஸ்டாக தேர்வாகினவர்கள் யார் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியவர்கள் விபரம் வெளியாகியாச்சு

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 3 வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அத்தோடு இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த வாரம் பைனல் நடைபெற்றது. அடுத்து யாரெல்லாம் பைனலுக்கு தேர்வாகுவார்கள் என முடிவு செய்ய போட்டிகள் நடத்தப்பட்டது.

அதில் இரண்டாவதாக அம்மு அபிராமி பைனலிஸ்ட் ஆகியுள்ளார். அதற்கடுத்த ரவுண்டில் வித்யூலேகா பைனலுக்கு முன்னேறினார்.அதற்கடுத்து வேட்டை முத்துக்குமார் மற்றும் தர்ஷன் இடையே இறுதி சுற்று நடைபெற்றது. அதில் இருந்து ஒருவர் பைனலுக்கு செல்வார், இன்னொருவர் எலிமினேட் ஆவர் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி அவர்கள் சாக்லேட் வைத்து டிஷ் செய்யவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் சிறப்பாக செய்த தர்ஷன் பைனலுக்கு முன்னேறினார், முத்துக்குமார் எலிமினேட் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement