• Apr 28 2024

5 ஆண்டுகளுக்கு பிஸியான நடிகராக மாறிய யாஷ்- இவருடைய 19 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் 2007 ம் ஆண்டு துணை நடிகராக அறிமுகமாகியவர் தான் யாஷ். இவருக்கு நல்ல ஒரு அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் தான் கேஜிஎஃப். இப்படத்தின் பின்னர் பிரபலமான நடிகராக மாறி விட்டார்.

இதனைத் தொடர்ந்து வெளியாகிய கேஜிஎஃப் 2 திரைப்படம் இவரை தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக மாற்றியுள்ளது. இதனால் நீல் கேஜிஎஃப் 3 படத்தை இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த படத்தின் சில சீன்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக யாஷ் பல பேட்டிகளில் குறி உள்ளார்.

இதற்கிடையில் யாஷின் அடுத்தடுத்த படங்கள் பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது தவிர யாஷ் வரிசையாக நான்கு பான் இந்தியா படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாஷ் பயங்கர பிஸியாம். இவர் கமிட்டாகி உள்ள 4 படங்கள் அடுத்தடுத்த ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

யாஷின் அடுத்த படத்தை டைரக்டர் நர்தன் இயக்க போவதாகவும், இதில் புஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது. இதில் யாஷ், கடற்படை அதிகாரியாக நடிக்க போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

மேலும் இப்போது வெளியாகிய லேட்டஸ்ட் தகவலின் படி, யாஷின் 19வது படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்க போகிறாராம். இந்த படத்தை 800 கோடி பட்ஜெட்டில் எடுக்க பிளான் செய்திருக்கிறார்களாம். 2.0, ஐ படங்களை போல் மெகா பட்ஜெட் படமாக இது உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement