• May 18 2024

ரஜினியுடன் இணைந்து நடித்தமைக்காக த்ரிஷா இவ்வளவு சம்பளம் தான் வாங்கினாரா..?ஆச்சரியமாக இருக்கே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் வரிசையில் முன்னணிக் கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை த்ரிஷா. இவர் தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அறிமுகப் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையினால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்று இருக்கின்றார்.

குறிப்பாக திரையுலகில் நுழைந்து சிறுது காலத்திற்குள்ளேயே விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி எனப் பல டாப் நாயகர்களுடனும் இணைந்து நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றார். அந்தவகையில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்களில் 'ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, சாமி, கில்லி' போன்ற படங்கள் இன்றும் நம் நெஞ்சை விட்டு அகலாமல் உள்ளன.

இவ்வாறாக கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையெனும் அந்தஸ்தில் இருக்கும் த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் நடிப்பைக் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா பற்றி தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது இவர் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படமே 'பேட்ட'.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தமைக்காக ரூ. 1 கோடி சம்பளமாக த்ரிஷா வாங்கியுள்ளார் என்ற ஒரு தகவல் சமீபத்தில் கசிந்துள்ளது. காலம் கடந்திருப்பினும் இப்படம் ஆனது இன்றுவரை பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement