• Oct 22 2024

USAவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் இவ்வளவு வசூலித்ததா..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தடபுடலாக தயாராகி உள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

இதில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் பிரபு, ஜெயராம் உள்ளிட்ட மல்டி ஸ்டார் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகியுள்ளது.



மேலும்  சோழ வம்ச வரலாற்றை மையமாக கொண்ட இந்த படத்தில் நம்ம ஊர் நாயகர்களின் வேடங்களைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முன்னதாக டீசர் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.மேலும்   இந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் உலகநாயகன் முதல் ரஜினிகாந்த் வரை பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  அவர்களது மேடைப்பேச்சும் வைரலானது.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ரூ. 500 கோடி பட்ஜெட் என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.



இப் படத்திற்கான ப்ரீ புக்கிங் எப்போதோ தொடங்கிவிட்டது, டிக்கெட்டுகள் திறந்த வேகத்தில் முடிந்துவிடுவதாக திரையரங்குகள் உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள்.

தற்போது இன்னொரு தகவல் என்னவென்றால் வெளிநாட்டில் பொன்னியின் செல்வன் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1 லட்சத்திற்கும் மேலாக வசூலித்துவிட்டதாக சொல்லப்படுகின்றது.



Advertisement