• Sep 20 2024

ஒரே நாளில் திருவண்ணாமலை சென்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினி.. என்ன நடந்தது தெரியுமா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

ஒரே நாளில் தனுஷ் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் திருவண்ணாமலை சென்றதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் தனுஷ் நடித்த ’ராயன்’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனுஷ் தனது இரு மகன்களுடன் திருவண்ணாமலை சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்பதும் அவருக்கு சிறப்பு பிரசாதங்களை கோவில் அதிகாரிகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனுஷ் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதற்கு முந்தைய நாள் திருவண்ணாமலையில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்ததாகவும் அப்போதுதான் அவருக்கு தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதே திருவண்ணாமலையில் தான் கடந்த ஒரு மாதமாக தங்கி இருப்பது தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியை திருவண்ணாமலையிலிருந்து தான் செய்து வருகிறார் என்றும் தனுஷூக்கு அது அங்கு போன பிறகுதான் தெரிந்தது என்று கூறப்படுகிறது. இருப்பினும் தனுஷ் மற்றும் அவரது மகன்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை சந்தித்ததாக எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
 
திருவண்ணாமலை கோயிலுக்கு மட்டும் சென்று விட்டு மூவரும் சென்னை திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிக்கு தனுஷ் திருவண்ணாமலை வந்து விட்டு சென்ற பிறகுதான் இந்த தகவல் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement