• May 21 2024

மீண்டும் தமிழையும் சரஸ்வதியையும் வீட்டுக்கு அழைத்து வர சந்திரகலா போட்ட புதிய பிளான்- அதிர்ச்சியில் கோதை- சிக்கிக் கொண்ட அர்ஜுன்

stella / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வசு சரஸ்வதிக்கு போன் பண்ணி அத்தைக்கு மாமா உங்களுக்கு சர்ப்போட் பண்ணினது தெரிஞ்சும் எதுவுமே திட்டலையாம் அவர் ஞாயமாத் தான் நடந்திருக்காரு என்று சர்ப்போட் பண்ணி பேசினது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கு என்று சொல்ல  சரஸ்வதியும் அது தான் எனக்கும் சந்தோஷமாக இருக்கு என்று பேசிக் கொள்கின்றனர்.

தொடர்ந்து சரஸ்வதி தமிழ் வர இந்த விஷயத்தைப் பற்றி சொல்ல தமிழ் அந்த அம்மா அப்பாவைத் திட்டாமல் இருந்திச்சே அதுவே போதும் என்று சொல்கின்றார். அத்தோடு சரஸ்வதி அத்தை மாமா மாதிரி நாங்களும் சண்டை போட்டாலும் எப்போதும் ஒற்றுமையாக இருக்கனும் என்று தமிழுக்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.


பின்னர் இருவரும் துாங்கிக் கொண்டிருக்கும் போது சரஸ்வதியின் கனவில் வசுவின் குழந்தை வந்து கூப்பிடுவது போல கனவு காண்கின்றார்.இதனால் திடீரென சரஸ்வதி எழுந்து வசுவின் குழந்தைக்கு ஏதும் ஆயிருக்குமோ என்று புலம்ப அந்த நேரம் வசு போன் பண்ணி குழந்தை இப்போ தான் துாங்கிறான் குழந்தை நல்லா இருக்கிறான் வீடியோ காலில் காட்டட்டுமா என்று கேட்கின்றார்.

ஆனால் சரஸ்வதி வேணாம் என மறுத்து விடுகின்றார். பின்னர் விடிந்ததும் வசுவின் அம்மா வசுவைப் பார்க்க வந்தபோது இரவு நடந்ததைச் சொல்ல சந்திரகலா நீ கவலைப்படாத குழந்தைக்கு பெயர் வைக்கிற பங்சன் வைச்சு தமிழையும் சரஸ்வதியையும் இங்க அழைச்சிட வேண்டியது தான் என்று சொல்ல வசு சநதோஷப்படுகின்றார்.

பின்னர் சந்திரகலா பிள்ளைக்கு பெயர் வைக்கிற பங்சன் வைக்கலாம் என்று இருக்கிறேன். சிம்பிளா வீட்டிலையே பண்ணிடலாம் எல்லா ஏற்பாடுகளையும் நானே பார்த்துக்கிறேன் என்று சொல்கின்றார். அப்போது கோதை வீட்டில் ஒரு நல்ல விஷேசம் நடக்கப் போகுது அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லி சந்தோப்படுகின்றார்.


பின்னர் சந்திரகலா வசுவிடம் தமிழையும் சரஸ்வதியையும் கூப்பிடுற விஷயத்தை இப்போ சொல்ல வேணாம் நோட்டீஸ் அடிச்சு கொடுக்கும் போது சொல்லுவோம் என்கிறார். பின்னர் எல்லோரும் ஆபிஸிற்கு கிளம்ப அர்ஜுனும் கிளம்பிப் போவதைப் பார்த்து வசு தமிழுக்கு போன் பண்ணி அர்ஜுன் கம்பனிக்கு போகும் விஷயத்தை சொல்ல தமிழும் அங்கு விரைந்து போய் அர்ஜுனைத் தடுத்து நிறுத்துகின்றார்.

அப்போது கோதை உங்க கம்பனி விஷயத்தில நாம தலையிட்டமா நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிற என்று கேட்ட போது நமச்சி நாங்க ஒன்றும் சும்மா வரல எலெக்ஷன் நடந்தப்போ உங்க மாப்பிள்ளை எங்க கிட்ட ஒரு சவால் விட்டாரு. அதை பண்ண தான் இங்க வந்தோம் என சொல்ல கோதை அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் அன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement