• Sep 21 2024

"அவர் பொண்ணு, பொண்டாட்டி என்ன பண்ணுறாங்க என்று அவரால சொல்ல முடியுமா?"…பயில்வானை வெளுத்து வாங்கும் ரேகா நாயர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'இரவின் நிழல்'. இப்படம் வெளியான நாளிலிருந்து இன்றுவரை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. எனினும் இப்படத்திற்கு ஒரு பக்கத்தில் பல விதமான பாராட்டுக்கள் கிடைத்தாலும் மறுபக்கத்தில் ஒரு சில சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கின்றது. இதில் நடிகை பிரிகிடா மற்றும் ரேகா நாயர் ஆகியோர் ஒரு சீனில் மட்டும் நிர்வாணமாக நடித்துள்ளனர். இதற்கு சினிமா விமர்சகர்கள் மத்தியில் சில எதிர்ப்புகள் கிளம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து யூடியூபில் பேசி சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் 'இரவின் நிழல்' படம் பற்றி பேசுகையில், பாசிடிவ்வான சில விமர்சனங்களை சொன்னாலும், இப்படத்தில் அரை நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்த நடிகை ரேகா நாயரை இழிவுபடுத்தி பேசியதாக புகார் எழுந்துள்ளமை அனைவரும் அறிந்த ஒரு விடயமே.

இது தொடர்பாக நடிகை ரேகா நாயர் சமீபத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். அதில் "பயில்வானை வைச்சு இருக்கீங்களா என்று நிறைய பேர் கேட்டிட்டு இருக்கீங்க. அதற்கு முன்னாடி நான் சாத்தான்களை பற்றி பேசியிருக்கன், கறுப்பர் கூட்டத்தின் உடைய அவதூறு பேச்சுக்கள் பற்றி பேசியிருக்கன், சித்ரா மரணத்தை பற்றி பேசியிருக்கேன், தொடர்ந்து சமூகத்தில் பெண்களுக்கு நடக்கக் கூடிய கொடுமைகள் பற்றி அதிகம் பேசிட்டு தான் இருக்கேன், ரங்கநாதனை பயில்வான் என்று சொல்லக் கூடி எனக்கு வாய் கூசுது.

அப்படிப்பட்டவன் சித்ராவின் கணவர் ரேகாவின் முன்னாள் காதலன் எனப் பேசியிருந்தார். இதை நான் ஒரு நிகழ்ச்சியில் வைத்து அவரிடம் "ஏன் இப்படி கொஞ்சம் கூடி யோசிக்காமல் சொன்னீர்கள்" எனக் கேட்டிருந்தேன். அதற்கு பயில்வான் "அது நீங்க தானா அப்போ அதை மாத்திக்கலாம், நமக்கு என்ன காசு வருகிறது" எனக் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து "நான் சமீபத்தில் நடித்திருந்த இரவின் நிழல் படம் பற்றி ஒருவர் அவரிடம் சமூக வலைத்தளத்தில் கேட்டிருந்த போது அதற்கு பயில்வான் என்னை பற்றி ஆரம்பத்தில் நல்ல மாதிரி சொல்லிற்று கடைசியில நான் நிர்வாணமாக நடிச்சிருக்கேன் என்று என்னை அசிங்கப்படுத்திற மாதிரி சொல்லி இருக்கார். இந்த வீடியோவை எல்லாம் பார்த்ததன் பின்னர் 'நான் தான் பயில்வானை வைச்சிருக்கன், இனிதான் அதோட வீடியோ, காணொளி விரைவில் ஒளிபரப்பப்படும்' என்று சொல்லி எனது முகநூலில் பதிவு ஒன்றினை இட்டிருந்தேன்" எனக் கூறியிருந்தார் ரேகா நாயர்.

இதனைத் தொடர்ந்து ரேகா நாயர் பயில்வானை ஒரு நாள் நேருக்கு நேர் சந்தித்து "படத்தை பற்றி நல்ல மாதிரி பேசிட்டு 'ரேகா நாயர் ரேகா நாயர்' என்று இப்பிடி கூவிட்டு இருக்கீங்களே கொஞ்சம் ஆவது உங்களுக்கு அறிவிருக்கா? இப்பிடி யாரவது பேசுவார்களா? சித்ராவை பற்றியும் அவரோட புருஷன் பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்" என்று கேட்டதாகக் கூறியிருந்தார்.

மேலும் "இரவின் நிழல் படத்தில் நான் நடிச்சதற்கு நிறைய பேரு எனக்கு வாழ்த்து சொல்லி இருக்காங்க. ஆனால் பயில்வான் மட்டும் தான் "நிர்வாணமாக நடிச்சிருக்கேன்" என்று வார்த்தையால கொன்றாரு. அப்பிடி என்னத்தை நிர்வாணமாக பார்த்திருப்பாரு?, அதில நிர்வாணமாகவோ , அரை நிர்வாணமாகவோ எந்த விதமான காட்சிகளும் இல்லை. சமூகத்தில நடக்கிற கொடுமைகளை மக்களுக்கு படமாக எடுத்துக்காட்டி அதனை குறைக்கணும் என்பதற்காக படம் எடுத்திருந்தோம் அந்தப் படத்தை இன்றுவரை சமூகம் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கின்றது.

அப்பிடி இருக்கும் போது பயில்வான் எதற்கு தேவை இல்லாமல் வார்த்தையை விடணும்?, அதனால தான் நிர்வாணம் என்றால் உனக்கு என்ன என்று தெரியுமா வா காட்டுறேன் என்று பயில்வானை பார்த்து கூறியிருந்தேன். அதுதவிர நான் நிர்வாணமாக நடிச்சிருந்தால் கூட அதைக் கேட்கிறதற்கு என் அப்பா, அம்மா, என் புள்ளைகள், என் புருஷனுக்கு மட்டும் தான் கேட்க உரிமை இருக்கு. இதை பற்றி எதுக்கு இவர் தேவை இல்லாமல் பேசணும்" எனக் கூறியிருந்தார்.

மேலும் ரேகா நாயர் அந்த வீடியோவில் "திரை விமர்சகராக இருந்தால் படத்தை முழுமையாக பார்த்து விட்டு மட்டும் விமர்சனம் செய்யணும். அதோட கருத்தோ அறிவோ இல்லாமல் பேசினால் எனக்கு கோவம் வரத்தானே செய்யும், ஒரு பெண்ணையோ ஆணையோ அவதூறாகப் பேசுவதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. அவர் பொண்ணு, பொண்டாட்டி என்ன பண்ணுறாங்க என்று எதற்கு அவரால வீடியோ போட முடியல. என்னை நேரில பார்த்து பேசியவருக்கே என்னை அடையாளம் தெரியல, இப்பிடியான சுய நினைவு இல்லாத மனுஷன் நாலு சுவருக்குள்ள என்ன வேணுமென்றாலும் பேசலாமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது இனியும் பயில்வான் என்னை பற்றியோ அல்லது பெண்களை பற்றியோ ஏதாவது அவதூறு பேசினால் நான் வேற மாதிரி ஆக்சன் எடுப்பேன் எனவும் கூறியிருக்கின்றார். "இனியும் நான் சும்மா இருக்க மாட்டேன், ஒரு கதையை முழுசாகப் புரிஞ்சுக்கத் தெரியாத நீ எல்லாம் திரை விமர்சகர் என்று சொல்லுறதற்கே வெட்கப்படணும்" எனவும் பயில்வானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி நான் செயலாலும், எழுத்தாலும் தொடர்ந்து கேட்டிற்றுத்தான் இருக்கேன், இதுக்கு மேலயும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையாக இருந்தால் நான் உயிரை துச்சமாக நினைச்சு என்ன வேணும் என்றாலும் செய்வேன் எனவும் அந்த காணொளியில் மிரட்டும் தொனியில் கூறியிருக்கார் ரேகா நாயர். ரேகா நாயரின் இந்தப் பேச்சு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement