• May 20 2024

விதி மீறல் செய்த ஜிபி முத்து... விளைவுகளை சந்திப்பீங்க... எச்சரித்த பிக்பாஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6ஆனது ஆரம்பமாகி விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் இடம்பெற்று வருகின்றது. இதில் முக்கியமான மற்றும் முதல் போட்டியாளராகளில் ஒருவராக இருப்பவர் ஜிபி முத்து. நிகழ்ச்சியின் முதல் நாளிலிருந்து இவர் செய்து வருகின்ற செயல்பாடுகள் யாவும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. 


பிக்பாஸ் ரசிகர்களை மட்டுமில்லாமல் சக போட்டியாளர்களையும் இவர் வெகுவாக கவர்ந்துள்ளார். தொடர்ந்து நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்றவும் உதவி வருகிறார். இவரின் வெள்ளந்தியான பேச்சுக்கள் மற்றம் நடவடிக்கைகளால் கவரப்பட்ட ரசிகர்கள், அவருக்காக ஆர்மியை உருவாக்கி உள்ளனர். 


இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்ட தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் ஏறக்குறைய இரண்டு மணிநேரங்கள் கடிகாரத்தில் தொங்கி வெற்றி பெற்று நிகழ்ச்சியின் முதல் தலைவராகவும் மாறி இருக்கின்றார் ஜிபி முத்து. அந்நிகழ்ச்சியின் தலைவராகவும் அனைவரையும் அரவணைத்து செல்கிறார். 


அத்தோடு கோபப்படும் வேளைகளில் அதையும்கூட நிதானமாக பேசி சமாதானம் செய்து அசத்தி வருகிறார். நிகழ்ச்சியில் ரசிகர்களின் பிரதானமான போட்டியாளராக இவர் இருந்துவரும் நிலையில், கடந்த சில நாட்களாக தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புவதாக கூறி வருகிறார்.

அதாவது தன்னுடைய குடும்பத்தினரையும் குழந்தைகளையும் பார்க்காமல் தனக்கு மூச்சு முட்டுவதாகவும் தன்னால் சரியாக சாப்பிடக்கூட முடியவில்லை என்றும் இவர் கேமரா முன்னாடி கதறி அழுதார். பிக்பாஸிடமும் இதைக் கூறி முறையிட்டார். 


ஆனால் பிக்பாஸ், அவர் நன்றாக விளையாடி வருவதாவும் பிக்பாஸ் குடும்பத்தினரிடம் அவரது குறையை கூறி ஆறுதல் அடையுமாறும் பிக்பாஸ் கூறி இருந்தார். ஆனால் அதையும் ஜிபி முத்து ஏற்கவில்லை. தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் அதற்கு தக்க நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ளுமாறும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 

இந்நிலையில் இன்றைய தினம் மறுபடியும் தான் வீட்டிற்கு செல்ல விரும்புவதாக கூறி அடம்பிடித்திருக்கின்றார் ஜிபி முத்து. இதனைக் கேட்ட பிக்பாஸ் பொறுத்துக்கொள்ள முடியாமல் "நீங்கள் மீண்டும் போறேன் போறேன் என்று சொல்லி இப்படியே செய்தால் இதுவும் ஒருவகை விதி மீறலாக தான் இருக்கும், இதற்கான பின் விளைவை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்" என மிரட்டும் தொனியில் கூறுகின்றார்.

அதுமட்டுமல்லாது "உங்க தம்பிக்கிட்ட பேசிட்டு உங்க கிட்ட பேசுறேன்" எனவும் கூறி இருக்கின்றார். எனவே ஜிபி முத்துவோட செயற்பாடுகளை வைத்துப் பார்க்கும் பொது இன்னைக்கு நாளைக்கு ஜிபி முத்துவை வெளியேற்றப்படக் கூடும் போல் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன தான் நடக்கு என்று.

Advertisement

Advertisement