விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது இரண்டாம் வாரம் இடம்பெற்று கொண்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.இவ்வாறு இருக்கையில் வைல்ட் கார்ட் என்றியாக மைனா உள்நுழைந்து தற்போது 21 போட்டியாளராக காணப்படுகின்றனர்.
இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது.
இவ்வாறு இருக்கையில் கதை சொல்லும் டாஸ்கில் ராபர்ட் மாஸ்டர் எனக்கும் காதல் வந்தது. பெயரை சொல்ல விரும்பவில்லை. அவரை திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் குழந்தை பிறந்ததும் பிரிந்துவிட்டோம், அது ஏன் என எனக்கு தெரியவில்லை. அத்தோடு எனக்கு knowledge இல்லை என அவர் சொன்னார். நான் சுத்தமாக படிக்கவில்லை.
என் மகளுக்கு நான் தான் அப்பா என தெரியுமா தெரியதா என்று கூட எனக்கு தெரியாது. என் முதல் மனைவியை இன்னொரு திருமணம் செய்துகொண்டார். ஆனால் என் மகளுக்கு நான் தான் அப்பா என நான் இறந்த பிறகாவது சொல்லுங்க.
"இந்த ஷோவை அவரும் பார்ப்பார், தெரிந்துகொள்வார் என்பதற்காக தான் நான் இந்த ஷோவுக்கே வந்தேன்."
அத்தோடு இரண்டு வயது வரை குழந்தையை பார்த்திருக்கிறேன். அதன் பின் 7 வயதில் ஒருமுறை ஸ்கூட்டரில் கூட்டி வந்தார். என்னை பார்த்து 'அங்கிளுக்கு hi சொல்லு' என என் முதல் மனைவி சொல்ல, மகளும் என்னை அங்கிள் என சொல்லிவிட்டு போனார்.அதெல்லாம் மிகப்பெரிய வலி என ராபர்ட் மாஸ்டர் கூறி இருக்கிறார்.
இவ்வாறு இருக்கையில் சமூகவலைத்தளத்தில் ராபர்ட் மாஸ்டரும் அவரது பெண்குழந்தையும் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் சொன்னது எல்லாம் பொய்யா..இல்லாவிடில் அவர் இரண்டாம் திருமணம் செய்து பிறந்த குழந்தையா..இல்லாவிடில் அவரது முதல் மனைவியின் குழந்தை இது தானா என பலரும் பல கேள்விகள் கேட்டு வரும் நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
Listen News!