தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவரும் பிக் பாஸ் தமிழ் 9வது சீசன், தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. போட்டியாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து FJ வெளியேறியுள்ளதாகவும், அவருடன் ஆதிரையும் எலிமினேட் ஆனதாகவும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக வைரலாகி வருகின்றன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கும் போது, ஒவ்வொரு எலிமினேஷனும் ரசிகர்களிடையே பெரிய விவாதங்களை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், FJ மற்றும் ஆதிரை வெளியேறியதாக கூறப்படும் தகவல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த பரபரப்புக்கு நடுவே, தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. அந்த ப்ரோமோவில், நிகழ்ச்சியின் நடுவர் விஜய் சேதுபதி, “அவங்க அவங்க வீட்டில இருந்து ஆட்கள் வரப்போறாங்க. அப்படி வந்தாங்கன்னா யாருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்? யாருக்கு பயமாக இருக்கும்?” என்று போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்புகிறார்.

இந்த கேள்வி, வீட்டிற்குள் உள்ள அனைவரையும் சற்று நெருக்கடியில் ஆழ்த்துவது போல் காட்சியளிக்கிறது. ஏனெனில், குடும்பத்தினரை சந்திக்கும் தருணம் ஒருபுறம் மகிழ்ச்சியையும், மறுபுறம் பயத்தையும் ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
இந்நிலையில் விஜய் சேதுபதி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, விக்ரம், சபரி மற்றும் கானா வினோத், “பயமா இருப்பது பார்வதிக்குத் தான்” என்று கூறுகின்றனர். அதேபோல் சுபிக்ஷா,“ஆதிரையோட குடும்பம் வந்தாங்கன்னா FJ கொஞ்சம் பயப்படுவான்.” என்றும் கூறியிருந்தார்.
Listen News!