• Apr 28 2024

கண்ணம்மாவை பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிய பாரதி- மாலையை அறுத்த சாபமிட்ட சர்மிலா

stella / 9 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுளளது என்று சுருக்கமாக பார்ப்போம்.

பாரதி, கண்ணம்மாவை கோயிலில் அழைத்து கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்ல கண்ணம்மா முடியாது யாரையும் என்னால ஏமாற்ற முடியாது நீ வெண்பாவையே கல்யாணம் பண்ணிக் கோ என்று சொல்கின்றார். ஆனால் கண்ணம்மாவோ பாரதியை திருமணம் செய்ய மறுத்து விடுகின்றார்.


இதனால் பாரதி தன்னுடைய கையை வெட்டி இரத்தம் வடிய நிற்பதைப் பார்த்த கண்ணம்மா பதறிப்போகின்றார். அத்தோடு பாரதி நீ கல்யாணம் பண்ணிக்கல என்றால் செத்திடுவேன் என்றுமிரட்டுகின்றார். இதனால் கண்ணம்மாவும் பாரதியைக் கல்யாணம் பண்ண சம்மதிக்கின்றார். பாரதி கண்ணம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாகவும் சத்தியம் பண்ணுகின்றார்.

தொடர்ந்து கண்ணம்மாவும் பாரதியும் கல்யாணம் பண்ணிக்கப்போவதைப் பார்த்த பாரதி வீட்டு வேலையாள் சௌந்தர்யாவிடம் வந்து சொல்ல சௌந்தர்யா சர்மிலா வெண்பா என எல்லோரும் மேலே கோயிலுக்குச் செல்கின்றனர். அங்கே பாரதி கண்ணம்மாவின் கழுத்தில் தாலியைக் கட்டி விடுகின்றார்.


இதனைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைந்ததோடு வெண்பாவின் அம்மா சர்மிலா கோபப்பட்டு பாரதி மற்றும் கண்ணம்மாவின் கழுத்திலிருந்த மாலையை அறுத்தெறிந்ததோடு பாரதிக்கு சாபம் போடுகின்றார்.கண்ணம்மாவின் குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement