• Jun 11 2025

மின்னல் முரளி படத்தைப் பார்த்து சூர்யா சாரே பாராட்டினார்....! – பசில் ஜோசப் ஓபன் டாக்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் புதுமுக வெற்றியாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பசில் ஜோசப். இயக்குநராகவும், நடிகராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில், 'மின்னல் முரளி' திரைப்படத்துக்குப் பிறகு பல தமிழ் நடிகர்கள், குறிப்பாக சூர்யா நேரடியாகப் பாராட்டியது குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.


2021ல் வெளியாகி, ஓடிடி தளமான Netflix ல் திரையிடப்பட்ட 'மின்னல் முரளி' படம் இந்தியாவின் மிகுந்த வெற்றி பெற்ற சூப்பர் ஹீரோவின் படங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த பசில் ஜோசப், ஒரு சாதாரண கிராமப்புற இளைஞனாக இருந்து சூப்பர் ஹீரோவாக மாறிய கதையை பலரும் வாழ்த்தியுள்ளனர்.

இப்படம், மலையாளத் திரையுலகை மட்டுமில்லாமல், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்குப் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பசில் ஜோசப், ‘மின்னல் முரளி’ படம் வெளியாகிய பின், தன்னுடைய நடிப்பு ரொம்பவே நல்லா இருந்தது என சூர்யா வாழ்த்தியதாகத் தெரிவித்துள்ளார். இத்தகவல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement