• Jun 23 2024

பேராசை பெருநஷ்டம்.. அட்லியை படத்தில் இருந்து நீக்கிய அல்லு அர்ஜுன்.. மீண்டும் பாலிவுட்டில் தஞ்சமா?

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, அதன் பிறகு பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் அந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பாலிவுட்டில் சில பிரபல நடிகர்கள் அட்லி கால்ஷீட்டுக்காக காத்திருந்த நிலையில் அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்தார் என்பதும் இந்த படத்தின் கதை விவாதம் கூட நடந்து வந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ’ஜவான்’ திரைப்படத்திற்கு 40 கோடி ரூபாய் அட்லி சம்பளம் வாங்கியதாக கூறப்படும் நிலையில் அல்லு அர்ஜுன் படத்திற்கு 80 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் ஆனால் அவ்வளவு தொகை தர முடியாது என்று அல்லு அர்ஜுன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டதை அடுத்து அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து மீண்டும் பாலிவுட்டில் படம் இயக்க அட்லி முயற்சி செய்து வருவதாகவும் மீண்டும் ஷாருக்கான் உட்பட சில நடிகர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அட்லி கேட்கும் சம்பளத்தை எந்த தயாரிப்பு நிறுவனம் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement