தமிழ் சினிமாவில் விஜய்யை அடுத்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்து உயர்ந்து நிற்கும் நடிகர் என்பதும் முக்கியமாகும்.
சமீபகாலமாக இவர் தேர்வு செய்து நடித்து வரும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதோடு வசூலிலும் அள்ளிக் குவித்து விடுகின்றது.அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் பிரின்ஸ். இப்படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்திருந்தார்.
அனுதீப் என்பவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இப்படம் தெலுங்கிலும் வெளியாகி இருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது. இந்த நிலையில் 3 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 17 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி விடுமுறை நாட்களும் இருப்பதால் இந்த இரண்டு நாட்களில் பெரிய வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக மாவீரன் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இதில் எந்தப் படம் சூப்பர் ஹிட்டாக அமையும் என ரசிகர்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!