• Sep 20 2024

சிக்கலில் சிக்கிய அருண் விஜய்யின் திரைப்படம்-உயர் நீரிமன்றம் விடுத்த உத்தரவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அருண் விஜய் இயக்குனர் ஹரி உடன் முதன் முறையில் கைகோர்த்துள்ள யானை படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. அந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருந்தார்.

கிராமத்து நாயகனாக அருண் விஜய் தோன்றி இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, பழனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.


அத்தோடு முதலில் மே 6 வெளியிடப்படுவதாக கூறப்பட்டது. இதன் பின்னர் ஜூன் 17ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த சமயத்தில் கமலின் விக்ரம் வெளியானதால் யானை கடந்த ஜூலை 1-ல் திரைக்கு வந்தது

ரூ.15 கோடியில் உருவான இந்த படம் ரூ. 50. 5 கோடிகளை கோடியை வசூலாக பெற்றது.மேலும் ஜாதிய உணர்வை மையமாகக் கொண்டு உருவாகி இந்த படம் குறித்த சர்ச்சை ஒரு மாதம் கழித்து தற்போது உருவாகியுள்ளது.

எனினும் இந்த படம் குறித்து மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், யானை திரைப்படத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாக காட்டியுள்ளதாகவும், மீனவர்களை கூலிப்படையினராகவும், குழந்தைகளை தவறாக பயன்படுத்துவராகம் சித்தரிப்பதாக கூறப்பட்டுள்ளது.

சில காட்சிகளில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தணிக்கை குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தீர்களா? என மனுதாரர் தரப்பிற்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் குழுவில் மேல்முறையீடு செய்ய மனுதாரரை வலியுறுத்தி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement