• May 20 2024

'அன்பே சிவம்' படத்தை இயக்க இருந்தது சுந்தர் சி இல்லையா..? அப்போ யாராக இருக்கும்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவரின் படங்களும் சரி, நடிப்பும் சரி, பேசுகின்ற வசனமும் சரி எப்போதும் தூள் பறக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும். அந்தவகையில் உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அன்பே சிவம்'.


இந்தப் படமானது ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களை பெற்றிருந்தாலும் படக்குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு அப்போது பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தவில்லை. ஆனாலும் பல வருடங்கள் கழித்தும் ரசிகர்கள் அப்படத்தை இன்றுவரை கொண்டாடி வருகின்றனர்.



உலகநாயகன் கமல்ஹாசன் எழுதிய இந்த கதையை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் சுந்தர். சி இயக்கியிருந்தார். எப்போதுமே காமெடி கமர்சியல் படங்களுக்கு பெயர் போன சுந்தர். சி 'அன்பே சிவம்' போன்ற திரைப்படத்தை இயக்கியது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்த ஒன்றே.


எனினும் அந்தப்படம் தொடர்பாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது 'அன்பே சிவம்' திரைப்படத்தை சுந்தர். சிக்குப் பதிலாக வேறொரு முக்கிய இயக்குநர் தான் இயக்கியிருக்க வேண்டியிருந்ததாம்.



அதாவது பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்சன் தான் 'அன்பே சிவம்' படத்தை இயக்கியிருக்க வேண்டியது. சில காரணங்களினால் சுந்தர்.சி உருவாக்க வேண்டிய நிலைமை உருவாகியதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை போஸ்டருடன் அப்போது வெளியிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர். அதில் கமலுடன் பிரியதர்ஷன், மாதவன், வித்யசாகர் உள்ளிட்ட பலரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement