தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 ஆனது கடந்த வாரம் தொடங்கியது. நேற்றுடன் முதல் வாரத்தை நிறைவு செய்துள்ள பிக்பாஸ் சீசன் 6 இல் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பல சுவையான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
இந்நிலையில், சனி, ஞாயிறு என இரு தினங்களிலும் கமல்ஹாசனின் என்ட்ரியானது போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது. மொத்தம் 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த சீசனில், இப்போது மைனா நந்தினியும் 21 ஆவது போட்டியாளராக இணைந்துள்ளார்.
இதனிடையே முதல் வாரத்தில் போட்டியாளர்களின் நிறை, குறைகளை சக போட்டியாளர்கள் மூலமாகவே தெரிய வைத்தார் கமல். அதாவது இந்த வீட்டில் இவரைப் போன்று இன்னொருவர் பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பும் நபர் யார் என்ற கேள்வியைக் கேட்டார். அக்கேள்விக்கு போட்டியாளர்கள் அளித்த பதில்களில் அமுதவாணனும் ஜிபி முத்துவுமே முதலிடத்தில் உள்ளனர்.
இருப்பினும் ஜிபி முத்துவை விட அமுதவாணன் முதன் நிலையில் இருந்தார். இதில் ஆயிஷா, குயின்ஷி, ராபர்ட் மாஸ்டர், சாந்தி என பெரும்பாலோனோர் அமுதவாணனுக்கு பாசிட்டிவான க்ரீன் டேக்ஸ் கொடுத்தனர். இதனால், ஒருகட்டத்தில் அமுதவாணன் கண்கலங்கிவிட்டார்.
இந்த சீசனில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே 2020-ஆம் ஆண்டு ''பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவேன். நான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால், அந்த இடத்தையே வேறமாதிரி மாற்றிக் காட்டுவேன்" எனக் கூறியிருந்தார் அமுதவாணன். இதோ இப்போது அவரின் ஆசையும் நிறைவேறியுள்ளது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் அமுதவாணனும் ஜிபி முத்துவும் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த எண்டர்டெயினர்களாக உள்ளனர். முதலில் ஜிபி முத்துவுக்கு ஆதரவு அதிகம் இருந்த நிலையில், அது இப்போது அமுதவாணன் பக்கம் அதிகரித்துள்ளது.
இதற்கான காரணம் என்னவெனில் அமுதவாணன் எல்லாவற்றையும் டேக் இட் ஈஸி என எளிதாக கடந்து செல்கிறார். ஆனால், ஜிபி முத்து சில நேரங்களில் வெளிப்படையாக பேசுகிறேன் எனக் கூறி போட்டியாளர்களிடம் வாய் கொடுத்து மாட்டிக்கொள்கிறார். இதுதான் அமுதவாணனை பலருக்கும் அதிகளவில் பிடிக்க காரணம் எனக் கூறி வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.
Listen News!