• Oct 06 2024

அல்போன்ஸ் புத்திரன் கொடுத்த லேட்டஸ்ட் இன்டர்வியூ.. சாண்டி மாஸ்டரின் சம்பவம் லோடிங்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான்  அல்போன்ஸ் புத்திரன். இவர் தனது முதல் படத்தின் மூலமே ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான பிரேமம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து  அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான கோல்ட் திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.


இந்த நிலையில் தற்போது  அல்போன்ஸ் புத்திரனின் லேட்டஸ்ட் இன்டர்வியூ ஒன்று கிடைத்துள்ளது. அதில் அவர் இரண்டு முக்கிய குறிப்புகளை தெரிவித்துள்ளார்.

அதன்படி மேலும் தெரிகையில்,  அல்போன்ஸ் புத்திரன் மீண்டும் திரைப்படங்களை இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதோடு, அவர் இயக்கத்தில் சாண்டி மாஸ்டரின் 'கிப்ட்' திரைப்படம் மற்றும் பஹத் பாசில், நயன்தாரா நடிப்பில் உருவாகும் 'பாட்டு' திரைப்படம் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement