• Sep 19 2024

தீடீரென ரசிகர்களுக்கு ஷாக் விசயத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமாகினார் நடிகை கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜனி முருகன் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.

இதையடுத்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை வைத்து உருவான திரைப்படம் நடிகையர் திலகம், இப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்தார்.இதற்காக தேசிய விருதையும் பெற்றார். இதைத்தொடர்ந்து ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் ஓடிடி-யில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஆனால், தெலுங்கில் வெளிவந்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் சில மோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது

எனினும் தற்போது கீர்த்தியின் கைவசம் மாமன்னன், போலோ ஷங்கர், வாஷி, தசரா என பல படங்கள் உள்ளன.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் " என்னுடைய நடிப்பு எப்போதுமே எனக்கு முழு திருப்தி தருவதில்லை. எப்போதும் இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்று தான் நினைத்துக்கொள்வேன். அதே போல், நான் நடிக்கும் படங்கள் நஷ்டங்களை சந்திக்க கூடாது என்பதிலும் கவனமாக இருப்பேன் ".

அத்தோடு , " பெரும்பாலும் நான் நடிக்கும் படங்களை நானே பார்க்க மாட்டேன். ஏனென்றால், அப்படி பார்க்கும் பொழுது என்னுடைய தவறு எனது கண்களுக்கு தெரியும். அதனால், இன்னும் நன்றாக நடிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும் " என தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தான் நடித்த படங்களை தானே பெரும்பாலும் பார்ப்பதில்லை என்று கூறி, தன்னுடைய ரசிகர்களுக்கு சிறுது ஷாக் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement