• Apr 28 2024

ஈழத்துச் சிறுமி அசானிக்காக நடிகர் விஜய் எடுத்த அதிரடி முடிவு... குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. 


குறித்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து இலங்கையில் இருந்து அசாணி என்கிற ஒரு பெண் கலந்து கொண்டு தனது பாடல்களால் மக்கள் மனதைக் கவர்ந்து வருகின்றார். மேலும் அந்த சிறுமி பணம் இல்லாமையினால் தான் தாமதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்ற தகவலும் பலருக்கும் இவர் மேல் ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.


இதனைத்தொடர்ந்து அசானி கடந்த மூன்று வாரங்களாகப் பாடி வருகின்றார். இவரின் ஏழ்மையினை அறிந்த பலரும் இவருக்கு உதவ முன்வந்த வண்ணமே இருக்கின்றனர். அந்தவகையில் அசானிக்கு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வீடு கட்டி கொடுப்பதாக ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாது இராஜாங்க அமைச்சர் ஒருவரும் உதவ இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.


இந்நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த பாடலாசிரியரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான விஜய் என்பவரும் அசானிக்கு உதவ முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் "அசானிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராக இருக்கின்றேன், முடிந்த அளவு உதவிகளை நான் அவருக்கு செய்வேன்" எனக் கூறியியுள்ளாராம்.


மேலும் "அசானி முதல்முறையாக பாடும் போது அதை பார்த்து நான் மிகவும் கண்கலங்கி விட்டேன், அசானியினுடைய மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது, ஆகவே என்னால் முடிந்த உதவியை நான் அசானிக்கு செய்வேன்" எனவும் கூறியுள்ளார் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான விஜய். இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரின் உடைய இந்த மனிதாபிமானத்தன்மையை பார்த்த பலரும் விஜய்க்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement