• Apr 28 2024

விருது வாங்கி விட்டு லிஃப்ட்டுக்குள் சென்று நடிகர் சித்தார்த் செய்த செயல்; ஷாக்கில் ரசிகர்கள்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா  நேற்று ஞாயிற்றுக்கிழமை (04-09-2022) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் இடம்பெற்றது.



மேலும் இதில், நடிகர் விக்ரம், ஆர்யா, ஜீவா, சித்தார்த் உள்ளிட்ட முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விருதுகள் பெற்றனர். இதனிடையே நடிகர் சித்தார்த் 2014-ஆம் ஆண்டு வெளியான 'காவியத் தலைவன்' என்ற படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "உண்மையான கலைக்கான பாராட்டும், விருதும் உரிய தருணத்தில் வர வேண்டும். அது இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. 8 வருடம் கழித்து எங்களின் உழைப்பிற்கும் பார்த்த கனவுகளுக்கும் சேர்ந்து அனுபவித்த கலைக்கும் இந்த மாதிரி ஒரு விருது கிடைத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. 



காவியத்தலைவன் படக்குழுவிற்கு நன்றி. மேலும் ஒரு அரசாங்கத்திடம் சிறந்த நடிகருக்கான விருது வாங்குவது என்பது மிக பெரிய விஷயம். அதுவும் 8 ஆண்டுகள் கழித்து வாங்குவது அதிசயம் மட்டுமின்றி அற்புதமும் கூட. இந்த அற்புதத்திற்கு நன்றி" என்று கூறினார்.


இதன் பின்பு வெளியேறிய சித்தார்த்தை ரசிகர்கள் புகைப்படம் எடுக்க சூழ்ந்து கொண்டனர். அப்போது லிஃப்ட்டுக்குள் சென்ற சித்தார்த்திடம் ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயன்றபோது அவரிடம் இருந்து செல்போனை நடிகர் சித்தார்த் பறித்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement