• Apr 28 2024

நடிகர் ரஜினியின் மகள் வீட்டில் வைரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நடிகர் தனுஷ்? என்னடா உங்கட அலப்பறைகள்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒரு வருவராக இருப்பவர் தனுஷ்.இவரை திருமணம் முடித்து பல வருடங்கள் வாழ்ந்த நிலையில் விவாகரத்து பெற்று தற்போது படம் இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார் நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா.

இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா வீட்டில் வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்ப்பில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் லாக்கரில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகளே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டதாகவும் வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா பொலிசில் புகார் அளித்துள்ளார். 

திருட்டு போன நகைகளில் டைமண்ட் மற்றும் தங்க நகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பல லட்சம் மதிப்புள்ள இந்த நகைகளை அவர் வீட்டில் வேலை செய்யும் மூன்று நபர்கள் தான் திருடியிருக்க முடியும் என கூறி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

இப்படி செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்க இணையவாசிகளோ இதை வைத்து மீம்ஸ் போட்டும், சமூக வலைத்தளங்களில் இதனை காலாய்த்து கருத்துக்களை போட்டும் வருகின்றனர். 

அந்த வகையில் குறித்த நகைகளை நடிகர் தனுஷ் எடுத்திருப்பார் எனவும், தற்போதுதான் அவர் பலகோடி செலவில் போயஸ் கார்டன் பகுதியில் பல கோடிகள் செலவில் வீடு கட்டியிருந்தார், அதனால் கடன் ஏதும் இருக்கும் எடுத்திருப்பார் பிறகு வாங்கி தருவார் ஜோசிக்காதிங்க என்றும், என்னதான் இருந்தாலும் முன்னாள் கணவர்தானே எனவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

ஆனால் நடிகர் ரஜினியின் மகள் வீட்டில் வைரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நடிகர் தனுஷ்?  என்னடா சொல்லுறீங்க? உங்கட அலப்பறைகள் தாங்க முடியல, என ரஜினி ரசிகர்கள் பதில் கருத்து தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.



Advertisement

Advertisement

Advertisement